For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

"நிலவு தொ-டு-வோம்": நிலாவுக்கு செயற்கைக்கோள் அனுப்ப இந்தியா திட்டம்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">பெங்களூர்:

Moonநிலாவுக்குச் செயற்கைக் கோள் அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது. இம்முயற்சியில் இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆய்வுக்கழகம்) மூலம் பல செயற்கைக்கோள்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அண்மையில் பிரெஞ்ச் கயானா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து அனுப்பப்பட்ட இன்சாட் 3 சியும் இந்தியாவின் சொந்த தொழில்நுட்பத்தில் உருவானதுதான்.

இந்தியா இதுவரை 12 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது.

தகவல் தொடர்-பு மற்றும் வானிலை ஆய்வு போன்றவற்றிற்கே செயற்கைக் கோள்களைத் தயாரித்து வந்த இஸ்ரோ தற்போது நிலவை ஆராயசெயற்கைக் கோள் அனுப்புகிறது.

நிலாவிற்கு இதுவரை அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் மட்டும்தான் செயற்கைக் கோளை அனுப்பியுள்ளனர்.

முதலில் ரஷ்யா கடந்த 1959 ம் ஆண்டு லூனா 2 என்ற செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தியது. பின்னர் அமெரிக்காவும் செயற்கைக்கோளை விண்ணில்செலுத்தியது.

இந்த இருநாடுகளும் விண்ணில் செயற்கைக் கோள்களை அனுப்பி அங்கே உறைந்த பனிக்கட்டியும், எரிபொருளான ஹீலியமும் அதிக அளவில் இருப்பதுகண்டுபிடித்த-ன. இ-து தவி-ர- நிலா -கு-றித்-து பல -ஆச்--ச-ரி-யங்-க--ளை வெளி-யிட்-ட-ன.

இந்த இரு வல்லரசு நாடுகளும் கண்டுபிடிக்கப்படாத ரகசியங்கள் பல இன்னும் இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Pslvதற்போது நிலாவுக்கு செயற்கைக்கோளை அனுப்ப இந்திய விஞ்ஞானிகள் முடிவுசெய்துள்ளனர். இந்த செயற்கைக்கோள் வரும் 2005 ம் ஆண்டு விண்ணில்செலுத்தப்படும்.

இதன் முதல்கட்டமாக திரவ எரிபொருள் மூலம் இயங்கும் ராக்கெட்டை மேம்படுத்தும் பணிநடைபெற்று வருகிறது. பூமிக்கும், நிலாவிற்கும் இடையேஉள்-ள- தூரம் 3 லட்சத்து 84 ஆயிரத்து 467 கிலோமீட்டர்.

மேலும் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் ஒரு தடவை நிரப்பப்படும் எரிபொருளால் 36 கிலோமீட்டர் தொலைவே செல்ல முடியும். இதனால் பி.எஸ்.எல்.விராக்கெட்டின் தரம் கூட்டுவதற்கான முயற்சிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இன்னும் 5 ஆண்டுகள் இருப்பதால் பி.எஸ்.எல்.வியின் தரத்தை மேம்படுத்த போதியகால அவகாசம் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே நிலாவுக்கு செயற்கைக் கோள் அனுப்புவதற்கு ஒரு தரப்பு விஞ்ஞானிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விண்வெளி தொழில்நுட்பத்துறைத் தலைவர் எச்எஸ்.முகுந்தா கூறுகையில், இது ஒரு முட்டாள்தனமான காரியமாகும். 30 ஆண்டுகளுக்கு முன்பேவல்லரசு நாடுகள் நிலாவிற்கு செயற்கைக் கோள் அனுப்பும் திட்டத்தைக் கைவிட்டுவிட்டன.

அங்கு உறைபனியும், பாறைகளும் தவிர வேறெதுவும் இல்லை என்று தெளிவாகக் கூறிவிட்டன. எதற்காக இவ்வளவு பணத்தைச் செலவழித்துசெயற்கைக் கோளை அனுப்ப வேண்டும்? இதற்காக இந்தியாவிற்கு எந்தவிதப் பயனும் கிடைக்கப்போவதில்லை.

நிலாவைப் பற்றித் தெளிவான தகவல்கள் இல்லாமல் செயற்கைக் கோள் அனுப்புவதில் எந்த விதப் பிரயோஜனமும் இல்லை என்றார்.

ஆனால் யார் என்ன சொன்னாலும், இந்தியாவின் தகவல்தொழில்நுட்பத் திறனை எடுத்துக்காட்டவும், சர்வதேச அளவில் இந்தியாவின் கவுரவத்தைஉயர்த்தவும், நிலாவில் உள்ள ரகசியங்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டே தீருவோம் என்று இஸ்ரோ தலைமை விஞ்ஞானி கஸ்தூரிரங்கன்தெரிவித்துள்ளார்.

(இந்-தச் செய்-தி கு-றித்-து உங்-கள் க-ருத்-தை அனுப்-ப-லாம்)

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X