தமிழகத்தில் இன்று
வைகோ-வின் புலிகள் ஆதரவு மாநாட்டில் கலந்-து -காள்--கி-றார் க-ரு-ணா-நி-தி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">திருச்சி:
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஈரோட்டில் ஜூலை 2 மற்றும் 3-ம் தேதிகளில் நடைபெற உள்ளபுலிகள் ஆதரவு மாநாட்டில் கலந்து கொள்வேன் என்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு. கருணாநிதிதெரிவித்தார்.
திருச்சியில் நிருபர்களிடம் திங்கள்கிழமை அவர் பேசியதாவது:
இலங்கையில் தனி நாடு கேட்டுப் போராடு வரும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த அமைப்புக்கு ஆதரவாக கருத்து சொல்ல இந்திய மண்ணில்அனைவருக்கும் உரிமை உள்ளது.
ஆகவே, புலிகள் அமைப்பு தொடர்பாக எந்த ஒருவரின் கருத்துச் சுதந்திரத்தையும் பறிக்க திமுக அரசுக்குஎண்ணமில்லை.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஈரோட்டி ஜூலை 2 மற்றும் 3-ம் தேதிகளில் புலிகள் ஆதரவுமாநாடு நடைபெற உள்ளது. அதில் நான் கலந்து கொள்வேன்.
இலங்கை அரசுக்கு இந்திய அரசு 100 கோடி ரூபாய் நிதி உதவி அளித்தது தொடர்பாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. அது தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கருத்தை பிரதமர் வாஜ்பாய் ஏற்கெனவேதெரிவித்துள்ளார். ஆகவே, அது பற்றி நான் மேலும் கருத்து தெரிவிக்கத் தேவையில்லை.
சாலை மறியலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை:
தமிழகத்தில் இனி மேலும் சாலை மறியலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கடலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் சமீபத்தில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டங்களால் பெரிதும்சிரமம் ஏற்பட்டதாக பொது மக்களிடமிருந்து கடுமையான கண்டனங்களும், புகார்களும் வந்துள்ளன.
ஆகவே, இனி மேலும் தமிழகத்தில் சாலை மறியல் போராட்டங்களில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும். சாலை மறியலில் ஈடுபடுவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தமிழக அரசுசட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளும்.
மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைந்துவருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கர்நாடகத்திலும்வறட்சி நிலவுகிறது. விரைவில் தமிழகத்திலும், கர்நாடகத்திலும் நிலைமை சீரடையும் என்று எதிர்பார்க்கிறேன்என்றார் கருணாநிதி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications