தமிழகத்தில் இன்று
"பாவச் சு-மை" அதி-க-ரித்-து-விட்-ட-தா? இந்-த உண்டியலில் போட்-டுவி-டுங்-கள்..!
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மங்களூர்:
பாவங்களைப் போடும் புதுமை உண்டியல் ஒன்று உடுப்பி கிருஷ்ணன் கோவிலில் உள்ளது.
பணத்தைப் போடும் உண்டியலை நாம் பார்த்திருக்கிறோம்.
அதாவது பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை அளிக்கும் வகையில் எல்லா கோவில்களிலும் உண்டியல்கள் இருக்கும்.
ஆனால் சற்று வித்தியாசமாக மக்கள் தங்கள் குறைகளை விட்டொழிக்கும் வகையில் புதுமையான உண்டியல் அமைக்க பேஜாவர் மடத்தின் விஸ்வேஷதீர்த்த சுவாமிகள் விரும்பினார்.
இந்த உண்டியலில் பணத்திற்குப் பதில் பாவங்களைப் போடலாம். பக்தர்கள் தங்கள் பாவங்களை பகவான் கிருஷ்ணனிடம் முறையிட்டு, இனிபாவங்கள் செய்யமாட்டோம் என்று உறுதிப்பிரமாணம் எடுக்க வேண்டும்.
தாங்கள் இதுவரை செய்த பாவங்களை இனிமேலும் தொடருவதில்லையென்றும், கெட்டபழக்கவழக்கங்களை விட்டொழிப்பதாகவும் உறுதிபூண்டுஅவற்றைத் தாளில் எழுதி உண்டியலில் போட வேண்டும்.
இதுதவிர ஒரு கோடி செலவில் போஜனசாலை, பூங்கா, மற்றும் அபிவிருத்தி பணிகள் உடுப்பியில் மேற்கொள்ளப்படும் என்று விஸ்வேஷ தீர்த்த சுவாமிகள்கூறினார்.