கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
ட்ரிங்..ட்ரிங்: வளர்-கி-ற-து சென்---னைத் -தா-லை-பேசித்-து-றை-
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
சென்னை தொலைபேசித்-து-றை-யின் இணைப்புத் திறன் 10 லட்சத்தை தாண்டியது.
தற்போது 7.75 லட்சம் இணைப்புத் திறன் கொண்டதாக சென்னை தொலைபேசித்-து--ற இயங்கி வருகிறது.
சென்னை தொலைபேசித்-து-றை-யின் தலைமை பொதுமேலாளர் சி.வி.ராஜன் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:
1984ம் ஆண்டு ஒரு லட்சம் இணைப்புத் திறன் கொண்டதாக சென்னைத் தொலைபேசி இருந்தது. 1999ல் அது 5 லட்சமாகஉயர்ந்தது. இப்போது 10 லட்சம் இணைப்புகள் தரக் கூடிய அளவுக்கு திறன் உயர்ந்துள்ளது.
கடந்த மார்ச் 31ம் தேதி வரை பதிவு செய்தவர்களுக்கு தொலைபேசி இணைப்புகள் தரப்பட்டுவிட்டன. இன்னும் 1.50 லட்சம் பேர்இணைப்புக்காக காத்திருக்கின்றனர்.
மூவாயிரம் இணைப்புகளுக்கு ஒரு எக்ஸ்சேஞ்ச் என்ற அளவில் புதிதாக 10 இணைப்பகங்கள் திறக்கப்பட உள்ளன.
தீபாவளி முதல் சென்னையில் செல்லுலார் தொலைபேசி வசதி தரப்படும். சென்னையில் 4000 இணைப்புகளும், மீஞ்சூர்,மகாபலிபுரம், மறைமலையடிகள்-நகர் ஆகியவற்றிற்கு தலா ஆயிரம் இணைப்புகளுடன் செல்லுலார் வசதி ஏற்படுத்தப்படும்.
வி.எஸ்.என்.எல். உதவியுடன் இன்னும் இரண்டு மாதங்களில் 34 எம்.பி. திறனுடன் இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் வசதிசென்னைத் தொலைபேசித்-து-றை-யில் ஏற்படுத்தப்படும்.
இந்தியாவில் சென்னைத் தொலைபேசி தான் அதிக வருவாய் ஈட்டுகிறது. கடந்த ஆண்டில் 905 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியஇந்-நிறுவனம் இவ்வாண்டில் ஆயிரம் கோடியாக இலக்கு -நிர்ணயித்துள்ளது என்றார் ராஜன்.












Click it and Unblock the Notifications