தமிழகத்தில் இன்று
கஞ்-சா வி-வ-சா-யம் செய்-யும் சந்-த-ன கட-த்தல் வீரப்-பன்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
சந்தன மரம் கடத்தியதெல்லாம் அந்தக் காலம். வீரப்பனின் புது பிசினஸ் கஞ்சா விவசாயம்.
ஆதிவாசிகளின் உதவியுடன் வீரப்பனின் காட்டில் கஞ்சா விளைச்சல் அமோகமாய் -நடக்--கும் விஷ-யம் போலீசாரை அதிர்-ச்-சி-யில்உறை-யச் செய்-தி-ருக்--கி-ற-து.
தனிக் காட்டு ராஜாவாக இருந்து கொண்டு தமிழகம் - கர்நாடகக் காடுகளில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருபவன்சந்தனமரக் கடத்தல் வீரப்பன். சத்தியமங்கலம் காட்டுக்குள் சந்தன மரங்களை வெட்டிக் கடத்துவதும், யானைகளைவேட்டையாடி தந்தங்களை கடத்துவதும் தான் வீரப்பனின் தொழிலா-க இ-ருந்-து வ-ரு-கி-ற-து.
இந்த தொழிலுக்கு குறுக்கே வந்த போலீசாரையும், வனத்துறையினரையும் இவன் விட்டு வைக்க-வில்-லை. அவர்களையும்வேட்டையாடி வருகிறான்.
20 ஆண்டுகளாக வீரப்பனை பிடிக்க எத்தனையோ முயற்சிகள். அத்தனையும் தோல்விகள். ஆனாலும், வீரப்பனின் பலம்குறைந்துள்ளது. காரணம் அவனது தளபதிகளாக விளங்கிய -முக்கியக் கூட்டாளிகளை பறி கொடுத்ததுதான். அதனால் -முன்புபோல் வீரப்பனால் சந்தன மரக் கடத்தலில் ஈடுபட -முடியவில்லை என்பதோடு, யானைகளையும் வேட்டையாட -முடியவில்லை.
எனவே இப்போது புது தொழிலில் வீரப்பன் இறங்கி விட்டான். கஞ்சா விவசாயம் தான் வீரப்பனின் புதுத் தொழில். அதைநேரடியாக செய்யாமல், ஆதிவாசிகளிடம் ஒப்பந்தம் செய்துள்ளான். வீரப்பனின் கட்டுப்பாட்டில் உள்ள காட்டுப் பகுதிகளில்ஆதிவாசிகள் கஞ்சா பயிரிட்டுக் கொள்ளலாம்.
அந்த பகுதிக்குள் போலீசாரால் நுழைய முடியாது என்பதால் எந்த தொந்தரவும் இருக்காது. எனவே ஆதிவாசிகள் இப்போதுகஞ்சா பயி-ரிடுதலில் -முழு -மூச்சாக ஈடுபட்டுள்ளனர். கஞ்சா விளைச்சல் -மூலம் கிடைக்கும் பணத்தில் வீரப்பனுக்கு பெரும் பங்குகிடைக்கிறது என்று ரங்கா ஷெட்டி என்ற கர்-நாடக கடத்தல்கார-ரின் உதவியாளர்கள்- மூலம் போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது.
ரங்கா ஷெட்டியை கொள்ளேகால் என்ற இடத்தில் வீரப்பனின் ஆட்கள் வெட்டிக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தன மரங்களை வெட்டிக் கடத்துவதில் இருந்த பல சிரமங்கள் கஞ்சா கடத்தலில் இல்லை என்பதாலும், கஞ்சாவுக்குமார்க்கெட்டில் நல்ல விலை கிடைப்பதாலும், வீரப்பன் கும்பல் அந்த தொழிலை கெட்டியாக பிடித்துக் கொண்டது என்கின்றனர்போலீசார்.
ஒரு கிலோ கஞ்சா 240 ரூபாய்க்கு விலை போகிறது. காடுகளில் கஞ்சா செடிகள் செழித்து வளர்வதால் வீரப்பனின் கஞ்சாசாம்-ராஜ்-ய-மும் கொடி கட்-டி-ப் பறக்-கி-ற-து.