தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

ம.தி.மு.க மாநாட்டுக்கு வந்தால்.... அத்வானிக்கு காங்கிரஸ் எச்சரிக்கை

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:

ஈரோட்டில் நடைபெறும் ம.தி.மு.கவின் புலி ஆதரவு மாநாட்டிற்கு உள்துறை அமைச்சர் அத்வானி வரக் கூடாது. மீறி அவர்வந்தால் அவருக்கு கறுப்புக் கொடி காட்டுவோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தெரிவித்தார்.

சென்னையில் செவ்வாய்க் கிழமை தமிழக காங்கிரஸ் கட்சி புது அலுவலகம் குடி புகுந்தது. அந்த அலுவலகத்தில் இளங்கோவன்செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டி:

ஈரோட்டில் ஜூலை 1,2 ஆகிய தேதிகளில் நடைபெறும் ம.தி.மு.கவின் ஈழத் தமிழர் எழுச்சி மாநாட்டிற்கு அத்வானி வருவதைகாங்கிரஸ் எதிர்க்கிறது. ஈழத் தமிழர் என்ற பெயரில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக வைகோ மாநாடு நடத்துகிறார். புலிகள்அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒன்று. அப்படியிருக்கும் போது இம்மாநட்டில் அத்வானி கலந்து கொள்வதுசரியல்ல.

மத்திய அமைச்சரவை எடுத்த முடிவுப்படி தான் இந்தியாவில் புலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையில்உள்ள அத்வானி அதை மீறுவது நியாயமல்ல. அதனால் அத்வானி இம்மாநாட்டிற்கு வரக் கூடாது என்று வலியுறுத்துகிறோம். மீறிஅவர் வந்தால், எனது தலைமையில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.

மத்திய அமைச்சரவை எடுத்த முடிவை எதிர்த்து புலி ஆதரவுப் போக்கை ம.தி.மு.க தொடர்ந்து கடைப்பிடிக்கிறது.அப்படிப்பட்ட கட்சியை அரசில் சேர்த்துக் கொண்டுள்ளார் வாஜ்பாய். தடை செய்யப்பட்ட புலிகளை ஆதரிப்பவர்கள் தேசத்துரோக குற்றம் செய்தவர்கள் என்று அறிவிக்கும் ஆண்மை பாஜகவுக்கு இருக்கிறதா? என்-று கேட்-டார் இளங்-கோ-வன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+