அழகிரி.: -- தி-மு-க-வில் நீயா -நானா யுத்தம்
ஆந்திராவில் லாரி நிறைய வெடி பொருட்கள் ஏற்றி வந்த 5 பேர் கைது
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">நெல்லூர்:
தமிழகத்திலிருந்து ஒரு லாரி நிறைய வெடி பொருட்களை ஏற்றி வந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளதை அடுத்து மாநிலம்முழுவதும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந் நிலையில், நெல்லூர் மாவட்டம், நாயுடுபேட்டை சோதனைச் சாவடியில் போலீஸார் செவ்வாய்க்கிழமைவாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தமிழகத்திலிருந்து பெர்ஹாம்பூருக்குச் சென்று கொண்டிருந்தலாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில் 12 ஆயிரம் ஜெலாட்டின் குச்சிகள், 10 ஆயிரம் டெடனேட்டர்கள், 3 ஆயிரம் கிலோ பியூஸ் வயர் ஆகியவைஇருந்தன. சாக்குப் பையில் இந்த வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
ஸ்ரீகாகுளம் மாவட்டம் நரசன்னபேட்டைக்குக் கொண்டு செல்வதாக லாரியில் இருந்தவர்கள் கூறினர். ஆனால்,அவற்றுக்கான முறையான ஆவணங்கள் அவர்களிடம் இல்லை. இதையடுத்து லாரியில் இருந்த 5 பேரும் கைதுசெய்யப்பட்டனர்.
சமீப காலத்தில் ஆந்திராவில் இவ்வளவு அதிக அளவு வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதல்முறை. சம்பவ இடத்துக்கு மாநில உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்துள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications