தமிழகத்தில் இன்று
உட-ன-டி வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்-கத் திட்-டம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
தமிழகத்தில் வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகள் குறித்துவிவாதிப்பதற்காக மாவட்ட கலெக்கடர்கள் கூட்டம் சென்னையில் புதன் கிழமைநடைபெறுகிறது.
2001ல் நடை பெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு புகைப்படம்ஒட்டிய அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் என்று தலைமைத் தேர்தல்ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி வாக்களர்களுக்கு அடையாள அட்டைவழங்கும பணி தற்போது தமிழகத்தில் நடை பெற்று வருகிறது.
தமிழகத்தின் வாக்காளர்களில் 52 சதவீதம் பேருக்கு அடையாள அட்டைவழங்கப்பட்டு விட்டது. ஆனாலும் கேரளா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களைவிட தமிழகம் இப்பணியில் பின் தங்கியிருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையர்எம்.எஸ். கில் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக அதிகாரிகளுடன் அவர் இதுகுறித்து ஆலோசனை நடத்தி. அடையாள அட்டை வழங்ங்கும் பணியை முடுக்கிவிட்டுச் சென்றுள்ளார்.
மேலும் அடையாள அட்டை வழங்குவது தொடர்பாக புதிய வழிமுறைகளை தேர்தல்ஆணையம் வகுத்துள்ளது. அதை பற்றியும் தமிழக அதிகாரிகளிடம் கில் விளக்கிவிட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில் இந்த புதிய வழிமுறைகளை மாவட்டக் கலெக்டர்களுக்கு எடுத்துச்சொல்லி, அடையாள அட்டை வழங்கும் பணியை விரைந்து முடிப்பதற்காக மாவட்டக்கலெக்டர்கள் கூட்டத்தை தலைமைச் செயலாளர் முத்து சாமி கூட்டியள்ளார்.
தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை காலை இக்கூட்டம் நடை பெறுகிறது. தமிழகதலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா , இணைத் தேர்தல் அதிகாரிகள் குமார்ஜெயந்த், காகர்லா உஷா மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
இனி வாக்காளர்களுக்கு வழங்கப்படும் அடையள அட்டைகள் அரசு போக்குவரத்துஅலுவலகங்களில் புகைப்படம் எடுத்து உடனடியாக கம்ப்யூட்டர் மூலமாக லைசென்ஸ்வழங்கும் ஆன்லைன் மூறைப்படி வழங்கப்படும்.
இதன்படி வாக்காளர்கள் ஏற்கனவே நடந்த தேர்தல்களில் வாக்குப்பதிவு செய்தவாக்குச் சாவடிகளுக்கு வர 3 தேதிகள் அறிவிக்கப்படும். அந்த தேதிகளில் ஒரு நாள்வந்தால் புகைப்படம் எடுத்து உடனடியாக அடையாள அட்டைகள் வழங்க்ப்படும்என்று தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications