தமிழகத்தில் இன்று
மதுரை:
அடுத்தடுத்து தொடர் தோல்விப் படங்களைக் கொடுத்து வந்த விஜய்யின் தோல்விக்கான காரணங்களைஒவ்வொருவரும் ஆராய்ந்து கொண்டிருக்க, மதுரையில் விஜய்யின் பட வெற்றிக்காக 10 மாதங்களாகவிரதமிருந்தாராம் ஒரு ரசிகை. (ஓஹோ... விஷயம் அப்படி போகுதா?)
மதுரையில் கொண்டாடப்பட்ட தனது பிறந்தநாள் விழாவில் இதைப்பற்றிச் சொன்ன போது, அங்கு கூடியிருந்தஒட்டுமொத்த ரசிகர் கூட்டமும் ஆச்சிரியத்தில் கப்சிப்.
இளைய தளபதி நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஓகே.
ஆனா? அவரின் வெற்றிக்காக விரதம் இருந்து பூஜை செய்யும் ரசிகைகளைப் பார்த்திருப்போமா?
அதிசயம் ஆனால் உண்மைங்க!
மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. (இவர்தான் அந்தப் பாவப்பட்ட ரசிகை)
இவர் விஜயின் தீவிர ரசிகையாம். (அதுக்காக இப்படியா?)
சுமார் 10 மாதங்கள் தொடர்ந்து ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டு வந்தாராம். விஜய் நடித்து தற்போது வெளிவந்தகுஷி படம் வெற்றி பெற்ற பின் அவர் தன் விரதத்தைக் கைவிட்டு விட்டாராம்.
இதைப்பற்றி விஜய் என்ன சொல்கிறார்?
மதுரையில் தன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டபோது அதில் கலந்து கொண்ட விஜய்,
இந்த சகோதரி போல் தமிழ்நாட்டில் எனது ரசிகர்கள் அனைவரும் நான் தோற்கக்கூடாது என்பதற்காக கடவுளிடம்வேண்டிக் கொள்கிறார்கள்.
அவர்களுக்கு என் ஆழமான நன்றிகள்.
நான் தற்போது பிரண்ட்ஸ், பிரியமானவளே ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். இரண்டும் பெரிய படங்களாகஅமையும் என்று நம்புகிறேன்.
ஒரு நடிகனுக்கு வெற்றி, தோல்வி என்பது மாறி, மாறி வரும். நான் தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுக்கமுயற்சி செய்து வருகிறேன்.
இதே போல் எனது ரசிகைகள் எனக்காகவும், எனது வெற்றிக்காகவும் விரதம் இருப்பது என்னை மிகவும் நெகிழவைக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications