தமிழகத்தில் இன்று
வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம்: தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி உதவி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
தமிழ்நாட்டில் இவ்வாண்டில் வேலை வாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு ரூ.71கோடியே 77 லட்ச ரூபாய் அனுமதித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு புதன்கிழமை இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் 2000-2001-ம் ஆண்டில் தமிழகத்தில் 28 மாவட்ட ஊராட்சிகள் மற்றும்385 ஊராட்சி ஒன்றியங்கள் மூலம் ரூ.71.77 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான முழுதொகையையும் மத்திய அரசு வழங்கியுள்ளது.
இதில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கும் ஊக்க நிதியான ரூ.10.76 கோடியும் அடங்கும்.
இத்திட்டத்தைச் செயல்படுத்த தற்போது முதல் தவணையாக ரூ.21.53 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.மத்திய அரசு விடுவித்த தொகைக்கு மேலாக மாநில அரசின் பங்குத் தொகை ரூ.17.94 கோடியை தமிழக அரசுவழங்கியுள்ளது.