தமிழகத்தில் இன்று
இந்துதிருமணச்சட்டம்: விதிகளை மாற்ற மாநிலங்களுக்கு அதிகாரம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
இந்து திருமணச் சட்டப்படி அனைத்து இந்துத் திருமணங்களும் கட்டாயமாகப் பதிவு செய்யப்படுவது குறித்து சம்பந்தப்பட்ட மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்து திருமணச்சட்டப்படி செய்யப்படும் அனைத்து திருமணங்களும் கண்டிப்பாகப் பதிவு செய்யப்பட வேண்டும்.
இதுகுறித்து அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம். இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தங்கள் மாநிலத்தில் உள்ள சூழ்நிலையைக்கருத்தில் கொண்டு முடிவு செய்து கொள்ளலாம்.
இதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
மகராஷ்டிரா, குஜராத், ஹிமாச்சல்பிரதேசம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் நடத்தப்படும் இந்துத் திருமணங்கள் கட்டாயமாகப் பதிவு செய்யும் முறைஏற்கனவே அமலில் உள்ளது.
தற்போது கிறிஸ்தவ திருமணச்சட்டம் 1872, பார்சி திருமணச்சட்டம் 1936, சிறப்புத் திருமணச் சட்டம் 1954 ஆகியவற்றின் கீழ் மட்டும் திருமணங்கள்பதிவு செய்யும் நடைமுறை இருந்து வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications