தமிழகத்தில் இன்று
தமி-ழ-கத்-தில் பு-தி-ய து-றை-மு-கம் அமைக்-கி-ற-து மலே-சி-யா
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
மலேசியத் தொழில்நுட்ப, நிதி உதவியுடன் அமையும் குளச்சல் துறைமுகத்தின் -மூலம் 5 ஆயிரம் பேருக்கு -நரடிவேலைவாய்ப்பும், 8 ஆயிரம் பேருக்கு மறை-மு-க வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்று மலேசிய அமைச்சர் டத்தோ சாமிவேலுதெ-ரிவித்தார்.
சென்னையில் இத்திட்டப் பணிகள் குறித்து தமிழக முதல்வர் கருணா-நிதியுடன் ஆலோசனை -நடத்திய பின்னர் அவர்செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக முதல்வர் கருணா-நிதி மலேசியா வந்திருந்த போது -நடந்த ஆலோசனையின் விளைவாக இத்திட்டங்கள்உருவாக்கப்பட்டுள்ளன. குளச்சல் துறை-முகத்தை இந்தியாவில் உள்ள துறைகங்களிலேயே தொழில்நுட்ப அளவில் தரம் வாய்ந்ததுறைகமாக அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்.
தமிழகத்தில் துறைகத் திட்டத்தை நாங்கள் செயல்படுத்துவதற்கு காரணம் இங்கு தொழிலாளர் பிரச்னை இருக்காது. மேலும்துறை-முகத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் 17 மீட்டர் ஆழ-முள்ள கடல் வசதி உள்ளது. 6 ஆண்டுகளில் இப்பணியை-முடிக்கத் திட்டமிட்டுள்ளோம்.
தமிழக அரசு டிசம்பருக்குள் அனுமதி தந்தால், ஜனவரியில் பணியை துவக்கி விடுவோம். -முதல் கட்டப் பணிகள் 2 ஆயிரம் கோடிரூபாய் செலவிலும், இரண்டாவது கட்டப் பணிகள் 1,500 கோடி செலவிலும் செய்து -முடிக்கப்படும்.
தமிழகத்தில் இத்துறைமுகம் -மூலம் 5,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 8,000 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும்கிடைக்கும்.
தமிழகம் தவிர, டெல்லி, ராஜஸ்தான், ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் சாலை மேம்பாட்டுப் பணியில் மலேசியா ஈடுபட்டுள்ளதுஎன்றார் அவர்.












Click it and Unblock the Notifications