தமிழகத்தில் இன்று
"அத்வானி வருகிறார்": தமி-ழ-க சிறைகளில் தீவி-ர சோதனை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சேலம்:
மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி தமிழ்நாடு வருவதையொட்டி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறைகளிலும் தொடர் சோதனை நடந்து வ-ரு-கி-ற-து.
முன்-பு அத்வானி கோவை வந்திருந்த போது தொடர்குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. பலர்- கொல்-லப்-பட்-ட-னர். இந்த முறையும் அதே போல் வேறுஎந்த அசம்பாவிதச் சம்பவங்களும் ஏற்படக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீசார் மேற்-கொண்-டுள்-ள-னர்.
இதன் ஒ-ரு ப-கு-தி-யா-க தமிழ்நாட்டில் அனைத்து சிறைகளிலும் தொடர் சோதனை நடத்தினார்கள்.
மே-லும், கோவை குண்-டு வெடிப்-புக்-குக் கார-ண-மா-ன அல்-உம்-மா தீவி-ர-வா-தி-கள் மீ-து இப்--போ-து தான் கு-ற்றப்-ப-த்திரிக்-கைதாக்-கல் செய்-யப்-பட்-டு-ள்ள-து. இந்-தக் கும்-பல் தான் அத்-வா-னி-யை-யும் --கால்ல மு-யன்-ற-து என்-ப-தும் கு-றிப்-பி-டத்-தக்-க-து.
சேலம் மத்தியச் சிறையில் தீவிரவாதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறையில் டிஐஜி எஸ்ரா அதிரடிப்படை வீரர்களுடன் வந்து திடீர் சோதனையில் ஈடுபட்டார்.
ஜூலை மாதம் முதல் வாரம் ஈரோட்டில் மதிமுக மாநாடு நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக
மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி, முதல்வர் கருணாநிதி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் ஈரோடு வருகிறார்கள்.
இதையொட்டி தமிழகத்திலுள்ள சிறைகளில் சோதனை போடும்படி உளவுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இதன்படி தமிழகத்திலுள்ள சிறைத்துறை டிஐஜிக்கள்சென்னை, வேலூர், கடலூர், மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி உள்பட பல்வேறு மத்தியச் சிறைகளில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த சோதனையில்ஈடுபட்டனர்.
இந்நிலையில் கோவை மத்தியச் சிறையிலும் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம், பெருந்துறை, சிறைகள் மூடப்பட்டு இங்குபணியாற்றிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கோவை மத்தியச் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கோவை மத்தியச் சிறையில் அல்உம்மா தீவிரவாதிகள் அடைக்கப்பட்டுள்ளதால் அங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பாதுகாப்புப் பணிகளை பலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் முதல்கட்டமாக சிறைகளில் ஊழியர்களின் எண்ணிக்கையைகுறைக்கும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications