தமிழகத்தில் இன்று
புதுவையில் வெள்ளியன்று இடைத் தேர்தல் - புதவை முதல்வர் போட்டியிடுகிறார்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">பாண்டிச்சேரி:
புதுவை முதல்வர் சண்முகம் போட்டியிடும் ஏனாம் தொகுதி இடைத்தேர்தல் வெள்ளிக் கிழமை நடைபெறுகிறது.
புதுவை காங்கிரஸ் முதல்வராக சண்முகம் மார்ச் 22ம் தேதி பதவியேற்றார். அவர் தற்போது சட்டமன்ற உறுப்பினர் இல்லை.முதல்வராக பொறுப்பேற்ற 6 மாதங்களுக்குள் அவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதால், ஏனாம்தொகுதியில் அவர் போட்டியிடுகிறார்.
சண்முகம் போட்டியிடுவதற்கு வசதியாக இத்தொகுதியின் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினராக இருந்த மல்லாடி கிருஷ்ணாராவ்,பதவி விலகினார்.
அதன்பின்னர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு நாளை வெள்ளிக் கிழமை ஒட்டுப்பதிவு நடைபெறுகிறது. இத்தொகுதியில்சண்முகத்தை எதிர்த்து தி.மு.க ஆதரவுடன் பா.ஜ.க வேட்பாளர் கங்காதர பிரதாப் போட்டியிடுகிறார். நாளை காலை 8 மணி முதல்மாலை 5 மணி வரை எலக்ட்ரானிக் இயந்திரங்கள் மூலம் ஓட்டுப்பதிவு நடைபெறும். ஓட்டு எண்ணிக்கை ஜூலை 2ம் தேதிநடைபெறுகிறது.