கிரிக்கெட் சூதாட்டம்: தேடப்பட்ட முக்கிய குற்றவாளி முகேஷ் குப்தா கைது
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
மேட்ச் பிக்ஸிங் தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளியாகத் தேடப்பட்டு வந்த புக்கி முகேஷ் குப்தா, சிபிஐஅதிகாரிகளால் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
இந்தியாவில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது கிரிக்கெட் சூதாட்டத்தில்ஈடுபட்டதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் குரோனியே மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து அணியிலிருந்து குரோனியே நீக்கப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க நீதிபதி எட்வர்ட்கிங் தலைமையில் தனி விசாரணைக் கமிஷன் நியமிக்கப்பட்டது. கமிஷன் முன் ஆஜரான குரோனியேவிடம்குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது இந்தியாவைச் சேர்ந்த புக்கி முகேஷ் குப்தா என்னை சந்தித்து லஞ்சம் கொடுத்தார். அவரை என்னிடம்அறிமுகப்படுத்தியது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன்தான் என்று குரோனியே கூறினார்.
இதையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டனரா என்று விசாரித்து வரும் மத்திய புலனாய்வுப்பிரிவு (சிபிஐ), முகேஷ் குப்தாவைக் கைது செய்ய முயற்சி மேற்கொண்டது. ஆனால், அதைக் கேள்விட்ட பிறகுமுகேஷ் குப்தா தனது குடும்பத்தினருடன் தலைமறைவாகிவிட்டார்.
முகேஷ் குப்தா கைது செய்யப்பட்டால்தான் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்றநிலையில் அவரைக் கைது செய்யும் நடவடிக்கையில் சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந் நிலையில், தில்லியில் மறைந்திருந்த முகேஷ் குப்தாவை சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்தனர்.பின்னர் அவரை தங்கள் அலுவலகத்துக்கு அழைத்து வந்து சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக பல உண்மைகளை சிபிஐ அதிகாரிகளிடம் முகேஷ் குப்தா கூறியுள்ளதாகத்தெரிகிறது. கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி முகேஷ் குப்தா கைது செய்யப்பட்டதைஅடுத்து அவ் வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. விரைவில் பல உண்மைகள் வெளிவரும் என்று சிபிஐஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யு.என்.ஐ.