Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

ஐ.நா.சபையில் நிரந்--த-ர இடம்: இந்தியாவை போர்ச்சுகலும் ஆத-ரிக்-கி-ற-து

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">லிஸ்பன்:

ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க ஆதரவு தருவதாக போர்ச்சுகல் தெரிவித்துள்ளது.

பிரதமர் வாஜ்பாய் நான்கு நாட்கள் பயணமாக இத்தாலி, போர்ச்சுகல் நாடுகளுக்குச் சென்றுள்ளார். இத்தாலி சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு அவர்போர்ச்சுகல் சென்றார். அங்கு பிரதமர் வாஜ்பாயும், அந்நாட்டுப் பிரதமர் அந்தோனியோ கட்டாரெசும் சேர்ந்து நிருபர்களைச் சந்தித்தனர்.

அப்போது போர்ச்சுகல் பிரதமர் அந்தோனியோ கட்டாரெஸ் பேசுகையில், இந்தியப் பிரதமர் வாஜ்பாய் போர்ச்சுகல் மற்றும் இந்தியா ஆகியஇருநாடுகளும் பொருளாதாரத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து விவாதிப்பதற்காக இங்கு வந்துள்ளார். இதுகுறித்து நான் மிகவும்மகிழ்ச்சியடைகிறேன்.

ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க நாங்கள் ஆதரவளிப்போம். மேலும் இந்தியாவில் முதலீடு செய்ய நாங்கள் மிகவும்விருப்பமாக உள்ளோம். இதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா சார்பில் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும், போர்ச்சுகல் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்மேகாமாவும் புதன்கிழமை கையெழுத்திட்டுள்ளனர் என்றார்.

ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க ஆதரவளிப்பதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்என்றார்.

இதுகுறித்து பிரதமர் வாஜ்பாய் கூறுகையில், இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இந்தியாவில் முதலீடு செய்ய போர்ச்சுகல் ஒப்புதல்அளித்துள்ளது. இது இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+