தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

கடலூரில் வன்முறை: 15 "விடுதலை சிறுத்தைகள்" கைது

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட 15 விடுதலை சிறுத்தை அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர் மாவட்டத்தில் நடந்து வரும் தொடர் கொலைகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த கோரி சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கடந்த 23 ம் தேதிஊர்வலம் நடத்தினர்.

இதில் கலந்து கொள்வதற்காக கடலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலிருந்து விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் பலர் வேன்களில் சென்றனர்.

பெரம்பலூர் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த சிலர் இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக வேனில்சென்றனர்.

இந்த வேன் கடலூர் மாவட்டம் செங்கால்ஓடை அருகே வந்தபோது வேனில் இருந்த சிலர் கிராமத்தினரைப் பார்த்து கேலி செய்தார்கள்.

இதையடுத்து கிராம மக்கள் சிலர் அந்த வேன் மீது கல்வீசித் தாக்கினார்கள். இச்சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து பஸ் மீது கல்வீச்சு, ஆர்ப்பாட்டம், வீடுகளுக்குத் தீ வைப்பு போன்ற சம்பவங்கள் நடந்தன.

ஒரத்தூரில் அரிசி ஆலைக்குத் தீ வைக்கப்பட்டது. கும்பகோணம் ரோட்டில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்குப் போலீசார் விரைந்து சென்று நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காட்டுமன்னார்கோவில், சேதியாத்தோப்பு பகுதிகளில் எந்த அசம்பாவிதச் சம்பவமும் ஏற்படாதவாறு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் நெல்லிக்குப்பம் பகுதியில் 20 க்கும் மேற்பட்ட வீடுகளுக்குத் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. அங்கேயும் தற்போது அமைதி திரும்பிவருகிறது எ-ன கூடுதல் டிஜிபி கோவிந்த் தெரி-வித்-தார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+