தமிழகத்தில் இன்று
புதிய ரகக் கார்களைத் தயாரிக்கிறது டெல்கோ நிறுவனம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
இன்டிகா வகைக் கார்களில் இரு புதிய ரகங்களைத் தயாரிக்க டாடா இன்ஜினியரிங் (டெல்கோ) நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக, அந் நிறுவனத்தின் பயணிகள் கார் பிரிவு பொது மேலாளர் ராஜீவ் தூபே கூறியதாவது:
டாடா நிறுவனத்தின் இன்டிகா வகைக் கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆகவே, அந்த வகைக் கார்களில் ஒரு ரகமும், நடுத்தர வகைக் காரும்தயாரிக்க டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல் கார் 2001-ல்விற்பனைக்கு வந்துவிடும்.
இந்தியாவில் பயணிகள் கார்களுக்கான டிமான்ட் குறைந்துள்ள போதிலும், இந்த ஆண்டுக்கான 90 ஆயிரம் கார்கள் என்ற விற்பனை இலக்கைஎட்டமுடியும் என்று டாடா நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் 3 மாதங்களில் கார்கள் விற்பனை அதிகமாக இருந்தது. ஆனால்,12 சதவீத சமச்சீர் விற்பனை வரி அமல்படுத்தப்பட்டதை அடுத்து கார்களின் விற்பனை குறைந்துவிட்டது.
இந்த ஆண்டில் கார் உற்பத்தித் தொழிலில் 15 முதல் 18 சதவீதம் வளர்ச்சி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டெல்கோவைப் பொறுத்தவரை55 சதவீத வளர்ச்சிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் தூபே.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications