தமிழகத்தில் இன்று
சான்பிரான்ஸிஸ்கோவில் எச்.ஐ.வி. பாதிப்பு அதிகரிப்பு
சான்பிரான்ஸிஸ்கோ:
அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ நகரில் எச்.ஐ.வி. வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறைஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு எச்.ஐ.வி.வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 900-மாக இருந்தது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட இரண்டு மடங்குஅதிகமாகும்.
பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள், பிரசாரம் ஆகியவற்றை மேற்கொண்டபோதிலும் கூட எச்.ஐ.வி. வைரஸ் பாதிப்பு அதிகமாகியுள்ளதுசான்பிரான்ஸிஸ்கோ சுகாதார அதிகாரிகளுக்கு கவலை அளித்துள்ளது.
சான்பிரான்ஸிஸ்கோவில் இப்போது அதிகரித்துள்ள இந்த வைரஸ் பாதிப்பு மிக மெதுவாக நாடு முழுவதிலும் பரவும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
சான்பிரான்ஸிஸ்கோவுக்கு ஏற்கனவே, ஓரினச்சேர்க்கையாளர்களின் தலைநகர் என்ற பெயர் உள்ளது. 1980-களில் எய்ட்ஸ் அதிக அளவில்பிரபலமானபோது, சான்பிரான்ஸிஸ்கோவிலும் அதிக நோயாளிகள் இருந்தனர்.
சான்பிரான்ஸிஸ்கோவில் 1981 முதல் இதுவரை 18,000 பேர் எய்ட்ஸ் நோயால் இறந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications