தமிழகத்தில் இன்று
இ-லங்-கை பிரச்-ச-னை-யில் மத்-தி-ய அர--சுக்-கு பொ-றுப்-புண்-டு
சென்னை:
இலங்-கைத் த-மி-ழர் பிரச்-ச-னை-யில் மத்-தி-ய அர-சுக்-கு பொ-றுப்-புண்-டு என பஞ்-சா-ப்மு-தல்-வர் பிர-காஷ் சிங் பாதல் கூறி-னார்.
மாநில சுயாட்சி கோருவது பிரிவினை ஆகாது. மாநிலங்களுக்கு சுயாட்சி வழங்கினால்இந்தியா மேலும் வலுவடையும் என்றும் அவர் கூறி-னார்.
ஈரோட்டில் நடைபெறும் ம.தி.மு.க மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் சென்னைவந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
மாநில சுயாட்சி கோரிக்கையை தி.மு.கவுக்கு பின் அகாலிதளம் தான் தொடர்ந்துவலியுறுத்தி வருகிறது. இந்திய அரசியல் சட்டம் கூட்டாட்சித் தத்துவத்தைஅடிப்படையாகக் கொண்டது. ஆனால், நீண்ட காலமாக மத்தியிலும், மாநிலத்திலும்காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றதால், மாநிலங்களின் அதிகாரம் கொஞ்சம் கொஞ்சமாகபறித்துக் கொள்ளப்பட்டன.
நாட்டில் கோடிக் கணக்கான ஏழை மக்கள் உள்ளனர். மாநிலங்களுக்கு அதிகஅதிகாரங்கள் தரப்படாவிட்டால், இந்த மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது. எனவேதான் நாங்கள் மாநில சுயாட்சி வேண்டும் என்கிறோம்.
இந்தியாவில் பஞ்சாப் மக்கள் 2 சதவீதம் தான் உள்ளனர். ஆனால், சுதந்திரத்திற்காகஉயிர்த் தியாகம் செய்தவர்களில் 80 சதவீதம் பேர் பஞ்சாபை சேர்ந்தவர்கள். நாங்கள்தேசப்பற்று மிக்கவர்கள்.
இந்தியா வலுமிக்கதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம். மாநிலங்கள்வலிமையானவைகளாக இருந்தால் தான் இந்தியா வலுமிக்கதாக இருக்கும். உறுப்புகள்வலிமையாக இருந்தால் தான் உடல் வலிமையாக விளங்கும். மாநில சுயாட்சிகோரிக்கை காரணமாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்த பாதிப்பும் வராது.
இலங்கைத் தமிழர் பிரச்சனையை கையாள வேண்டிய கடமை மத்திய அரசுக்குஉள்ளது. இந்த நாட்டுக்கு கவலை ஏற்படுத்தும் பிரச்னைகளில் நாங்கள் கருத்துதெரிவிக்க முடியாது. இதுவொரு சர்வதேச பிரச்னை என்றார் பாதல்.












Click it and Unblock the Notifications