தமிழகத்தில் இன்று
இடைக்கால கவுன்சில் திட்-டத்-தை நிரா-க-ரித்-த-னர் புலிகள்
கொழும்பு:
இலங்கையில் நிலவி வரும் இனப்பிரச்சனைக்கு ஒரே தீர்வு தனி நாடுதான் என்றுபுலிகள் அமைப்பு ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசின் தீர்வால் தமிழர்கள்பிரச்சனைகள் தீராது இந்த அர்த்தமற்ற முடிவைஏற்க மாட்டோம் என அவர் கூறியுள்ளார்.
பாலசிங்கம் மேலும் கூறியதாவது
இலங்கை இனப் பிரச்சனையை தீர்ப்பதற்காக வட கிழக்கு மாகாண கவுன்சிலுக்கு அதிகஅதிகாரம் வழங்கப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. அது தமிழர்களின்விருப்பங்களை, தேவைகளை நிறைவேற்றும் விதத்தில் அமையாது..
இடைக்கால கவுன்சிலில் இலங்கை அரசு அளிக்க இருக்கும் சில இடங்களுக்காகஇலங்கை அரசு கூறியுள்ளபடி ஆயுதங்களை ஒப்படைக்க நாங்கள்அறிவில்லாதவர்கள் அல்ல.
அதிபர் சந்திரிகாவின் அரசு அர்த்தமற்ற யோசனைகளை தெரிவித்து வருகிறது.யாழ்ப்பாணத்தை கைப்பற்றுவதில் தீவிரமாக உள்ளோம். அதில் எந்த விதமானமாற்ரமும் இல்லை.
முன்பு ராணுவத்தினரை விலக்கிக் கொண்டால் பேச்சுவார்த்தை நடத்த தயாராகஇருப்பதாக அறிவித்தோம். அதை இலங்கை அரசு ஏற்க மறுத்து விட்டு, இப்போதுபேச்சுவார்த்தை நடத்த வருமாறு அழைக்கிறது என்று அவர் கூறினார்.
(பு-லி-க-ளின் இந்--த அறி-விப்-பு சரி-யா? தவ-றா?. எ-ழு-துங்-க-ளேன்...)












Click it and Unblock the Notifications