For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
ஓய்வு பெறும் நாளில் மாநகராட்சி அதிகாரி சஸ்பெண்ட்
கோவை:
ஓய்வு பெறும் நாளில் கோவை மாநகராட்சி அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கோவை மாநகராட்சியில் நிர்வாக இன்ஜினியராகப் பணியாற்றி வந்தவர் ஜெகதீசன். இவர் மாநகராட்சியில் நடந்த பல்வேறு முறைகேடுகளில் தொடர்புகொண்டிருந்தது குறித்து மாநகராட்சி மன்றத்தில் புகார் எழுந்தது.
இதனையொட்டி இவர் ஓய்வு பெறும் நாளான வெள்ளிக்கிழமை திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கோவை மாநகராட்சியில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக ஓய்வுபெறும் நாளில் இதுவரை 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Saturday, July 1, 2000, 5:30 [IST]