மே.இ. தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இங்கிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு
லண்டன்:
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவதுகிரிக்கெட் டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி பெறும் நிலையில் உள்ளது.
3 நாள் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில், அந்த அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில்188 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் மோசமாக விளையாடி54 ரன்களுக்கு ஆட்டமிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, 9 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் என்ற நிலையில், வெள்ளிக்கிழமைகாலை தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிமேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியில் கேம்ப்பெல் 82 ரன்களும், ஹைன்ட்ஸ் 59 ரன்களும்எடுத்தனர். இங்கிலாந்து அணியில் கோ, கார்க் இருவரும் தலா 4 விக்கெட்டுகளைவீழ்த்தினர்.
அடுத்து இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. மேற்கிந்தியத் தீவுகள்அணியின் ஆம்புரோஸ், வால்ஷ் இருவரின் சிறப்பான பந்துவீச்சால் இங்கிலாந்துவீரர்கள் அடுத்தடுத்து அவுட்டானார்கள்.
இறுதியில் 134 ரன்களுக்கு இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸை இழந்தது.அணியிலேயே அதிகபட்சமாக ஸ்டூவர்ட் 28 ரன்கள் எடுத்தார். மேற்கிந்தியத் தீவுகள்அணியில் ஆம்புரோஸ், வால்ஸ் இருவரும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இங்கிலாந்தை 134 ரன்களுக்கு சுருட்டியதுடன் 133 ரன்கள் முன்னிலையுடன் தனதுஇரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாகமேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆட்டம் இருந்தது.
முதல் இன்னிங்ஸை குறைந்த ரன்களுக்கு இழந்ததை அடுத்து இங்கிலாந்து அணியின்பந்து வீச்சாளர்கள் மிகச் சிறப்பாகப் பந்து வீசினர். காட்டிக், கார்க், கோ ஆகியோர்சிறப்பாகப் பந்து வீசி மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்களை அவுட்டாக்கினர்.
ரிட்லி ஜேக்கப் மட்டும் இரட்டை இலக்கமாக 12 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் ஒற்றைஇலக்க ரன்களில் அவுட்டானார்கள். இறுதியில் 26.4 ஓவரில் 54 ரன்களுக்குமேற்கிந்தியத் தீவுகள் அணி அவுட்டானாது.
டெஸ்டின் 2-வது நாளில் மட்டும் 21 விக்கெட்டுகள் வீழ்ந்தன என்பதுகுறிப்பிடத்தக்கது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியை 54 ரன்களில் சுருட்டியதுடன் மட்டுமல்லாமல்இரண்டாவது இன்னிங்ஸில் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில்,தனது இரண்டாவது இன்னிங்ஸை இங்கிலாந்து தொடங்கியது.
ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழக்காமல் ரன் ஏதும் எடுக்காமல்இருந்தது.
இன்னும் 3 நாள் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில், இங்கிலாந்துக்கு அதிக வெற்றிவாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.