தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
சென்னையில் என்ஜீனியர் படுகொலை
சென்னை:
சென்-னை-யில், பொதுப்பணித்துறை என்ஜீனியர் அடையாளம் தெரியாத கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இப் படுகொலைச் சம்பவம் வேளச்சேரிப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு நடந்தது. இவர் வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது ஆட்டோரிக்ஷாவில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று இவரை வெட்டிக்கொன்றது.
கான்டிராக்ட் விஷயத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக இவர் அக்கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கூறினர்.
அக்கும்பல் குறித்த அடையாளம் எதுவும் தெரியவில்லை. இப்படுகொலைச் சம்பவம் குறித்துப் போலீசார் புலன்விசாரணை நடத்தி வருகிறார்கள்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications