தமிழகத்தில் இன்று
மிக வேக-மா-க வள--ரும் இந்-தி-ய பொ-ரு-ளா-தா-ரம்
கோவை:
இந்தியவின் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஒட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி ஆண்டுக்கு 8 முதல் 10 சதவீதம்வரை உயர்த்தினால், விரைவில் வறுமையை ஒழிக்க -முடியும் என கோவையில் மத்திய -நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா -கூ-றிார்.
ஈரோட்டில் ம.தி.மு.க. நடத்தும் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக விமானத்தில் யஷ்வந்த் சின்கா, இன்று கோ வ வந்தார்.கோவையில் அவர் -நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
இந்தியப் பொருளாதாரம், சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடும் போது மிக வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த 97-98 ம் ஆண்டுஒட்டுமொத்த உற்பத்தி(ஜிடிபி) 5 சதவீதம் வீழ்ச்சியில் இருந்தது. 98-99 ம் ஆண்டில் இது 6.8 சதவீத வளர்ச்சியாக மாறியது.99-2000 ஆண்டில் 6.4 சதவீதமாக உள்ளது.
இந்த வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 7 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சி விகிதத்ததை 8 -முதல் 10 சதவீதமாகஉயர்த்தினால், -நாட்டின் வறுமையை விரட்ட விரைவில் விரட்ட முடியும்.
உற்பத்தி திறனில் 98-99 ம் ஆண்டு 3. 6 சதவீதம் வளர்ச்சி இருந்தது. இது 99-2000ம் ஆண்டில் 8.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.கட்டுமானத் துறையில் வளரச்சி 7.1 சதவீதத்திலிருந்து 9.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. விவசாய உற்பத்தியில் மட்டும் வீழ்ச்சிஏற்பட்டுள்ளது. 7.2 சதவீத வளர்ச்சியில், 1.3 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதற்கு காரணம், ஒரிசா மாநிலத்தில் புயலால் ஏற்பட்ட பாதிப்பு, மற்றும் -நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்ட வறட்சி காரணமாகஅமைந்தது. சர்வதேச நாடுகளில் இந்தியாவின் வலிமை உயர்ந்து வருகிறது. போர்ச்சுகல், இத்தாலி மற்றும் ஐரோப்பிய நாடுகளில்இந்தியாவிற்கு நில்ல பெயர் ஏற்பட்டு வருகிறது.
1962ம் ஆண்டிற்கு பிறகு, ஐரோப்பிய நாடுகளுடன் எவ்வித ஒப்பந்தம் இந்தியாவுடன் ஏற்படவில்லை. தற்போது -முதல் -முதலாகவர்த்தக ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய -நாடுகள் அமைப்பு -முன் வந்துள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் நமது உதவியைப்பெற இந்த நாடுகள் ஒப்பந்தம் செய்யவுள்ளன.
சில பொதுத்துறை -நிறுவனங்களை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. வேறு சில பொதுத் துறை -நிறுவனங்களின்பங்குகள் தனியாருக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
மறு ஆய்வு செய்து, சீரமைக்க முடியாது எனக் கருதப்படும் 6 -நிறுவனங்களை மட்டும் -மூ-ட அரசு டிவு செய்துள்ளது. இது மத்தியஅமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. -மூடப்படும் இந்த 6 --நிறுவனங்களில் ஊட்டி இந்துஸ்தான் போட்டோபிலிம் -நிறுவனம் இல்லை. ஊட்டி எச்.பி.எப் -நிறுவனத்தை மறு ஆய்வு செய்யும் -முயற்சியின் ஒரு கட்டமாகத்தான் தொழிற்சாலைமறுசீரமைப்பு -நிதி -நிறுவனம், ஒரு எச்ச-ரிக்கை -நாட்டீசை அனுப்பியுள்ளது.
வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் ஒரு சதவீதம் குறைக்க மத்திய அரசு -முடிவு செய்துள்ளது. தொழில் துறையில்ஒட்டுமொத்தமாக அரசு வட்டி விகிதத்தை குறைக்க -முடிவு செய்துள்ளது. இதற்கு காரணம், வட்டிக்காக ஒவ்வொரு பட்ஜெட்டின்போதும் அதிக -நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியுள்ளது. தற்போது ஒரு லட்சத்து 2 ஆயிரம் கோடி ரூபாய் வட்டியாக செலுத்தவேண்டியுள்ளது.
மேலும், நிதி சீரமைப்பு மசோதாவை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது. இதில், கடன் வாங்கும் அளவை குறைக்கத் தேவையானநடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்-றார்.