தமிழகத்தில் இன்று
நடிகர் சிவாஜிகணேசனை பல நடிகர்களும் நடிகைகளும் சந்தித்து அவரை நடிகர்சங்கத்துக்கு வருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
தமிழகத்தில் நடிகர் சங்கம் வருவதற்கு முக்கியமான காரணமாக இருந்தவர் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் ஆவார். நடிகர் சங்கம்
ஆரம்பி க்கப்பட்ட பிறகு சில நடிகர்களுடன் ஏற்பட்ட மனவேறுபாடு காரணமாக இனிநடிகர் சங்கத்திற்கே வரமாட்டேன் என கோபமாக கூறிவிட்டார். அதன் படி கடந்த 20ஆண்டு காரணமாக நடிகர் சங்கத்திற்கே செல்லவில்லை.
இந் நிலையில் நடிகர் சங்கத்துக்கு புதிய தலைவராக விஜயகாந்தும், செயலாளராக சரத்குமாரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
வெள்ளிக் கிழமையன்று நடைபெற்ற நடிகர் சங்க கூட்டத்தில் மீண்டும நடிகர்சங்கத்துக்கு வருமாறு சிவாஜி கணேசனை அழைப்பது என முடிவு செய்யப்பட்டு,அவரை பதவி ஏற்பு நாளான 12ம் தேதி அவரை அழைதக்து வருவது எனவும்முடவெடுக்கப்பட்டது.
அதன்படி நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த், செயலாளர் சரத் குமார் தலைமையில்நடிகர்கள் சத்யாராஜ், அர்ஜுன், பார்த்திபன், பிரபு, பாண்டியராஜன், பூபதி, கண்ணன்,தியாகு, வீரமணி, நடிகைகள் மனோரமா, பசி சத்யா, நடிகர் சங்கத்தைச் சேர்ந்தகே.என், காளை, கே.ஆர். செல்வராஜ், டி.எஸ் .ராஜா, ராஜேந்திரன், இசையமைப்பாளர்தேவாவின் மகன் ஸ்ரீ காந்த், இசை அமைப்பாளர் கங்கை அமரன் ஆகிய அனைவரும்சிவாஜி இல்லத்தில் அவரை சந்தித்து தங்களது வேண்டுகோளை தெரிவித்தனர்.
சிவாஜி கணேசன் தன்னை சந்தித்த நடிகர், நடிகைகளிடம் நீண்ட நேரம் மனம் திறந்துபேசினார். நடிகர் நடிகைகள் அவரை நடிகர் சங்கத்திற்கு வருமாறு வேண்டுகோள்விடுத்தனர். அவர் அதற்கு பார்க்கலாம் என்று கூறினார்.
அந்த சந்திப்புக்கு பிறகு விஜயகாந்த் நிருபர்களிடம் தெரிவிக்கையில் எங்கள்வேண்டுகோளுக்கு இணங்க சிவாஜி கணேசன் நிச்சயம் மீண்டும் நடிகர் சங்கத்துக்குவந்து எங்களை வழி நடத்துவார் என்-றார்.












Click it and Unblock the Notifications