டிராவை நோக்கி இலங்கை-பாகிஸ்தான் 3-வது கிரிக்கெட் டெஸ்ட்
கண்டி:
இலங்கைக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கண்டியில் நடைபெற்று வரும் 3-வதுமற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் பலத்த மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து இந்த டெஸ்ட் டிராவில் முடியும் நிலையில் உள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையை அடுத்து மைதானம் ஈரமாகஇருந்ததால், சனிக்கிழமை நடைபெற இருந்த 4-ம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.
முன்னதாக வெள்ளிக்கிழமை காலை 1.4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. முந்தையநாள் ஆட்டம் முடிவில் 199 ரன்கள் எடுத்திருந்த இலங்கை துவக்க ஆட்டக்காரர்அட்டபட்டு தனது இரட்டை சதத்தைப் பூர்த்தி செய்தார்.
மழையின் காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டபோது இலங்கை 5 விக்கெட் இழப்புக்கு467 ரன்கள் எடுத்திருந்தது. அட்டபட்டு 207 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல்இருந்தார்.
கொழும்பு மற்றும் கல்லேயில் நடைபெற்ற முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும்பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.