தமிழகத்தில் இன்று
மாநிலங்களுக்கு சுயாட்சி தேவை என்--கி-றார் பஞ்சாப் முதல்வர்
சென்னை:
மாநில சுயாட்சி கோருவது பிரிவினை ஆகாது. மாநிலங்களுக்கு சுயாட்சி வழங்கினால் இந்தியா மேலும் வலுவடையும் என்று பஞ்சாப் முதல்வர்பிரகாஷ் சிங் பாதல் தெரிவித்தார்.
ஈரோட்டில் நடைபெறும் மதிமுக மாநாட்டில் பங்கேற்பதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை சென்னை வந்த அவர், விமான நிலையத்தில் நிருபர்களுக்குஅளித்த பேட்டி:
மாநில சுயாட்சிகோரிக்கையை திமுகவுக்குப் பின் அகாலிதளம்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்திய அரசியல் சட்டம் கூட்டாட்சித் தத்துவத்தைஅடிப்படையாகக் கொண்டது. ஆனால், நீண்ட காலமாக மத்தியிலும், மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றதால், மாநிலங்களின் அதிகாரம்கொஞ்சம் கொஞ்சமாக பறித்துக் கொள்ளப்பட்டன.
நாட்டில் கோடிக்கணக்கான ஏழைகள் உள்ளனர். மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் தரப்படாவிட்டால், இந்த மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது.எனவேதான் நாங்கள் மாநில சுயாட்சி வேண்டும் என்கிறோம்.
இந்தியாவில் பஞ்சாப் மக்கள் 2 சதவீதம்தான் உள்ளனர். ஆனால், சுதந்திரத்துக்காக உயிர்த் தியாகம் செய்தவர்களில் 80 சதவீதம் பேர் பஞ்சாபைச்சேர்ந்தவர்கள். நாங்கள் தேசப்பற்று மிக்கவர்கள்.
இந்தியா வலுமிக்கதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம்.
மாநிலங்கள் வலிமையானவைகளாக இருந்தால்தான் இந்தியா வலுமிக்கதாக இருக்கும். உறுப்புகள் வலிமையாக இருந்தால்தான் உடல் வலிமையாகவிளங்கும். மாநில சுயாட்சி கோரிக்கை காரணமாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்த பாதிப்பும் வராது.
இலங்கைத் தமிழர் பிரச்சினையை கையாள வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது. இந்த நாட்டுக்கு கவலை ஏற்படுத்தும் பிரச்சினைகளில் நாங்கள் கருத்துதெரிவிக்க முடியாது. இதுவொரு சர்வதேச பிரச்சினை என்றார் பாதல்.
-
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
IPL 2026: ஐபிஎல் 2026 கால அட்டவணை வெளியீடு.. சென்னை மேட்ச் எப்போது? தேதி வாரியாக முழு லிஸ்ட்! -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications