தமிழகத்தில் இன்று
எங்-கும் பு-லி... எதி-லும் பு-லி...
கோவை:
ஈரோட்டில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ந-டத்தும் தமிழக எழுச்சிமா-நாட்டில் தமிழ் ஈழத்திற்கு ஆதரவா-க கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தொண்டர்களின் எழுச்சிமிகு பேரணியில் ஈரோடு மாநகர் சிக்கித் திணறியது.சனிக்-கி-ழ-மை தொடங்கிய தமிழக எழுச்சி மாநாட்டின் -முதல் -நிகழ்ச்சியாக -நடந்தபேரணியை அதற்கென அமைக்கப்பட்டிருந்த மேடையில், ம.தி.-மு.க பொதுச் செயலர்வைகோ, மத்திய அமைச்சர்கள் கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன், கணேசன்,தொழிற்சங்கத் தலைவர் துரைசாமி ஆகியோர் பார்வையிட்டனர்.
ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்ட வண்ணமிகு பேரணி, கரகாட்டம்உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தது. இதில் 1.5 கிலோ மீட்டர் தூரத்திற்கும.தி.-மு.க.வின் இ-ரு வர்ணக் கொடியை தொண்டர்கள் கொண்டு வந்ததுஅனைவரையும் கவர்ந்தது.
மாநாட்டில் தமிழ் ஈழத்திற்கு ஆதரவாக "ஈழத் தமிழன் சிந்தும் ரத்தம் என் ரத்தம்,காப்போம், காப்போம், தமிழனைக் காப்போம் கொடுப்போம் கொடுப்போம் குரல்கொடுப்போம்..ஈழம் மலர குரல் கொடுப்போம் போன்ற கோஷங்கள்எழுப்பப்பட்டன.
ஒரு சில தொண்டர்கள் தங்கள் அணிந்திருந்த பேட்ஜில் விடுதலைப் புலிகளின்தலைவர் பிரபாகரனின் படத்தை அணிந்திருந்தனர். இதனை படமெடுக்க-முயன்றபோது, போட்டோ கிராபர்கள் தடுக்கப்பட்டனர்.
மாலையில் தொடங்கிய பொதுக் கூட்டத்தில், தமிழக முதல்வர் கருணா-நிதி, ஆந்திர-முதல்வர் சந்திரபாபு -நாயுடு, மத்திய -நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா, கோவை எம்.பி.,ராதாகிருஷ்ணன், மாநல சுகாதாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஆகியோர்கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications