தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
இந்தியாவில் சுற்றுலா வளர்ச்சிக்கு மலேசியா முதலீடு
ரா-ம-நா--த-பு-ரம்:
இந்தியாவில் சுற்றுலா வளர்ச்சிக்காக மலேசியர்கள் முதலீடு செய்ய தயாராக உள்ளனர் என்று மலேசிய தூதரக உதவி ஹை கமிஷ்னர் மஜ்லான் முகமதுதெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் மஜ்லான் முகமது நிருபர்களிடம் கூறியதாவது:
இந்திய மலேசிய நல்லுறவை வளர்ப்பதற்காக மலேசிய கலைக்குழுவினர் சென்னையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். இந்தக்குழுவினர் மதுரை, கோவை,திருச்சி போன்ற நகரங்களிலும் கலை நிகழ்ச்சிகள் நடத்தவுள்ளனர்.
இந்தியாவில் சுற்றுலா வளர்ச்சிக்காக மலேசியர்கள் ஏராளமான நிதி முதலீடு செய்ய தயாராக உள்ளனர்.குறிப்பாக அவர்கள் இந்திய துறைமுகப்பகுதிகளின் வளர்ச்சிக்கு பண உதவி செய்ய ஆர்வமாக உள்ளனர்.
தற்பொழுது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் துறைமுகத்தை மலேசியா தத்தெடுத்-துள்-ள-து என்-றார்.












Click it and Unblock the Notifications