தமிழகத்தில் இன்று
இலங்கைக்குத் தொடர்ந்து ஆயுதம் வழங்குவோம் - பாக்.
கொழும்பு:
விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரிட்டு வரும் இலங்கை ராணுவத்திற்கு தொடர்ந்து ஆயுதம் வழங்குவோம் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் இவ்வாறு கூறியுள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் டெய்லி நியூஸ் ஆங்கிலப் பத்திரிகையில் செய்திவெளியாகியுள்ளது.
முஷாரப்பின் பத்திரிகை ஆலோசகர் ஜாவேத் ஜப்பார் இப்பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், இலங்கை நிலவரத்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் கண்காணித்து வருகிறது.இலங்கைக்குத் தேவைப்படும் எந்த உதவியையும் அளிக்க பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் முஷாரப் தயாராக உள்ளார்.
இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண எந்த உதவியையும் செய்ய பாகிஸ்தான் தயாராக உள்ளது. தொடர்ந்து இலங்கை ராணுவத்திற்கு ஆயுதங்களும்வழங்குவோம் என்று கூறியிருந்தார்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அஜீத் பாஞ்சா திங்கள்கிழமை கூறுகையில், இலங்கைப் பிரச்சினையைத் தீர்க்க இந்தியா ஆர்வமாக உள்ளது.ஒன்றபட்ட இலங்கை நீடிக்கத் தேவைப்படும் அமைதிப் பேச்சுக்களில் பங்கு கொள்ளவும் இந்தியா தயார் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இலங்கைக்குஉதவத் தயார் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications