தமிழகத்தில் இன்று
மதிமுக மாநாட்டிற்கு புலிகள் ரூ. 5 கோடி கொடுத்தனர்:
சுவாமியின் பு-தி-ய பு-கார்
மதுரை:
ஈரோட்டில் நடந்த மதிமுகவின் தமிழர் எழுச்சி மாநாட்டிற்கு விடுதலைப் புலிகள் ரூ. 5கோடி நிதியுதவி கொடுத்து உதவியுள்ளனர் என்று தமிழக ஜனதாக் கட்சித் தலைவர்சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஈரோடு மாநாட்டுக்குவிடுதலைப் புலிகள் ரூ. 5 கோடி நிதியுதவி செய்துள்ளனர். இந்த மாநாட்டிற்கு மத்தியஅமைச்சர் அத்வானி கலந்து கொண்டதைக் கண்டிக்கிறேன்.
தனி ஈழத்தை ஆதரிக்க முடியாது என்பதையே இந்த மாநாட்டில் பேசிய அத்வானி கூறிவிட்டுச் சென்றுள்ளார். எனவே வைகோ கூட்டிய இந்த மாநாட்டின் நோக்கம்நிறைவேறவில்லை.
அதிமுக, காங்கிரஸ் கூட்டணி விரைவில் முடிவுக்கு வரும். இதுகுறித்து காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி விரைவில் தனது முடிவை அறிவிப்பார். இக்கூட்டணிநீடிக்கக் கூடாது என்று சோனியாவைச் சந்தித்துக் கூறினேன்.
மாநில சுயாட்சி கோருவது தவறு. அப்படிக் கோரிக்கை விடுப்பவர்கள், தேசதுரோகிகள். இதுபோன்ற சமூக விரோதிகள் ஆளும் மாநிலங்களில் குடியரசுத் தலைவர்ஆட்சியை அமல் செய்ய வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications