சிங்கர் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வென்றது இலங்கை
கல்லே:
சிங்கர் கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் புதன்கிழமை நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது.
கல்லேயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பாகிஸ்தான் பேட் செய்தது. முதல் நாள் பெய்த மழையின் காரணமாக ஆட்டம் 45 ஓவர்களாகக்குறைக்கப்பட்டது.
இலங்கை அணியினரின் சிறப்பான பந்துவீச்சினால் ரன் குவிக்க பாகிஸ்தான் அணியினர் மிகவும் சிரமப்பட்டனர்.
ஒரு கட்டத்தில் 84 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் தவித்தது. இந் நிலையில், இன்சமாம் உல்-ஹக் நின்று ஆடி ரன்கள் சேர்த்தார்.அவர் அசார் மெஹ்மூத்துடன் சேர்ந்து ஆடி 9-வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்தார். அவர் 83 ரன்கள் அடித்தார்.
இறுதியில் பாகிஸ்தான் 45 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 164ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் ஸோய்ஸா 34 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைவீழ்த்தினார்.
அடுத்து ஆடிய இலங்கை 37.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அட்டபட்டு 62 ரன்கள் குவித்து அணியின்வெற்றிக்கு உதவினார். அவருக்கு அடுத்தபடியாக சங்காக்கரா 35 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் அணியில் வக்கார் யூனிஸும், அப்துர் ரஸாக்கும் தலா இரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
சிங்கர் கோப்பையின் அடுத்த ஆட்டம் இலங்கைக்கும், தென் ஆப்பிரிக்காவும் இடையே கல்லேயில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications