பொறியியல் கல்லூரி கவுன்சலிங் 21-ல் துவங்குகிறது
சென்னை:
பொறியியல் (பி.இ) பட்டப்படிப்பு சேர்க்கைக்கான "கவுன்சிலிங் வருகிற 26-ம் தேதியிலிருந்து துவங்குகிறது.
தகுதிப் பட்டியல் 9-ம் தேதி வெளியிடப்ப டும் என்று தமிழ்நாடு தொழில் கல்வி நுழைவுத் தேர்வு செயலாளர் டாக்டர் சங்கர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் புதன் கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் முதலாண்டு பட்டப்படிப்புகளில் சேர பிளஸ் டூ தேர்ச்சி பெற்று, நுழைவுத் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளிடம் இருந்து 59 ஆயிரத்து 265 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
பிளஸ் டூ வகுப்பில் தொழில் கல்வி படித்த மாணவ மாணவிகளிடம் இருந்து வந்துள்ள 2 ஆயிரத்து 81 விண்ணப்பங்களும் இதில் அடங்கும்.
பொறியியல் கல்லூரிகளின் சேர்க்கைக்கான கவுன்சிலிங் இம்மாதம் 26ம் தேதி முதல் தொடங்கும். இதற்கான தகுதிப் பட்டியல் (கட் ஆப் மார்க்ஸ்) வருகிற 9ம் தேதி வெளியிடப்படும்.
விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு ஜூலை 17ம் தேதி நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications