For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொறியியல் கல்லூரி கவுன்சலிங் 21-ல் துவங்குகிறது

By Staff
Google Oneindia Tamil News

விமான நிலைய அதிகாரிகள் மீது நடவடிக்கை வரும்

சென்னை:

பிரதமரின் பாதுகாப்பு பணியில் அலட்சியம் காட்டிய சென்னை விமான நிலையபாதுகாப்பு போலீசார் 11 மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

சென்னை மற்றும் கயத்தாறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் வாஜ்பாய்செவ்வாய் கிழமை சென்னை வந்தார். பிரதமரின் வருகையை ஒட்டி சென்னை விமானநிலையத்தில் பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

இவர்களது பாதுகாப்பு பணியின் தரத்தை அறிய சென்னை விமானப் போக்குவரத்துபாதுகாப்பு பிரிவு அதிகாரிகள், இத்துறையை சேர்ந்த நான்கு பேரை மாற்று வேஷத்தில்பயங்கர ஆயுதங்களுடன் அனுப்பி வைத்தனர். அவர்கள் எந்த வித பயணடிக்கெட்டும், அடையாள அட்டையும், அனுமதி உத்தரவும் இல்லாமல் பிரதான வாயில்வழியாக விமான நிலையத்திற்குள் சென்றனர்.

அதேபோல் விமானங்கள் புறப்படும் வழியாகவும் உள்ளே சென்றனர். எவ்விதசோதனையும் இன்றி பிரதமர் வந்து இறக்கும் இடம் வரை போய் விட்டு திரும்பினர்.

சந்தேகத்தின் பேரில் யாராவது விசாரிக்க மாட்டார்களா என்ற எண்ணத்தில் விமானநிலைய வளாகத்திற்குள் சிறிது நேரம் நின்று கொண்டிருந்தனர்.

இந்த ஒத்திகை நடைபெறும் போது போலீஸ் உயரதிகாரிகள் உள்பட பலர் பாதுகாப்புபணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் கண்ணில் படும் படியாக இந்த நான்கு பேரும்நடமாடிய போதிலும், எந்த வித விசாரணையும் இல்லை.

எனவே பாதுகாப்பு பணியில் மிகவும் அலட்சியாக இருந்த போலீஸ் அதிகாரிகள்மற்றும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவில் விமானப்போக்குவரத்து பாதுகாப்பு பிரிவு, டெல்லிக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.

அதன்படி 2 அதிகாரிகள் உள்பட 11 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றுசென்னை போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X