நாடகமாடுகிறது தி.மு.க. .. கூறுகிறார் ஜெ..
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனையும், அவரது கூட்டாளிகளையும் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ 40 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசுஅறிவித்திருப்பது தேர்தல் வருவதையொட்டி ஆடும் நாடகமாகும் என்று அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
வீரப்பனைப் பற்றியும், அவரது கூட்டாளிகள் குறித்தும் தகவல்கள் கொடுப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று ஏற்கனவே அ.தி.மு.க.ஆட்சியில்அறிவிக்கப்பட்டது. தற்போது தி.மு.க.மீண்டும் இதை அறிவிப்பது தேவையில்லாத ஒன்று.
வீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமாரை விடுவிப்பதில் ஏகப்பட்ட குளறுபடிகள், சிக்கல்கள் இருந்தது அனைவருக்கும் தெரியும். அதாவதுசட்டசபையில் முதல்வர் கருணாநிதி நவம்பர் 13 ம் தேதி கூறுகையில், வீரப்பன் பிடியிலிருந்து நடிகர் ராஜ்குமார் விரைவில் விடுவிக்கப்படுவார் என்று கூறினார்.
ஆனால் ராஜ்குமாரோ அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே விடுவிக்கப்பட்டு பண்ணை வீடு ஒன்றில் வைக்கப்பட்டிருந்தார். ராஜ்குமார் விடுவிப்புவிஷயத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி பொதுமக்களைக் குழப்பி விட்டார்.
வீரப்பனுக்கும், தீவிரவாத இயக்கங்களான டி.என்.எல்.ஏ., டி.என்.ஆர்.டி. மற்றும் டி.என்.எல்.எஃப் ஆகியவற்றுக்கும் இடையிலுள்ள தொடர்பு குறித்துதமிழக அரசு தெளிவாக எதையும் தெரிவிக்கவில்லை.
வரும் சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க.வெற்றிபெறும் என்று கருத்துக்கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. இதனால் பயந்த தி.மு.க மக்களை தங்கள் வழிக்குஇழுக்கும் வகையில் தேர்தல் நாடகம் நடத்தி வருகிறது என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
யு.என்.ஐ.