யோகம் பயிலுவோம்
அமெரிக்காவுக்குப் படையெடுக்கும் இங்கிலாந்து விஞ்ஞானிகள்
லண்டன்:
பிரிட்டனில் உள்ள உலகப் புகழ் பெற்ற ராயல் சொஸைட்டியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பலர் அமெரிக்காவை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
அமெரிக்காவில் தங்களுக்கு நல்ல மதிப்பும், எதிர்காலமும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பிரிட்டனின் உயர் விஞ்ஞானிகள் அங்கு அதிக அளவில் செல்லத்தொடங்கியுள்ளனர். இத் தகவலை ராயல் சொஸைட்டி தெரிவித்துள்ளது.
புகழ்பெற்ற ராயல் சொஸைட்டியில் பணியாற்ற உலக நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் விரும்புவார்கள். ஆனால், இப்போதைய நிலவரப்படி அங்குபணியாற்றுவதை விட அமெரிக்காவில் பணியாற்றவே அவர்கள் அதிகம் விரும்புகின்றனர்.
1960-ம் ஆண்டு முதல் வெளிநாட்டுக்குச் செல்லும் விஞ்ஞானிகளைப் பற்றி கணக்கெடுத்து வரும் ராயல் சொஸைட்டியின் கணக்குப்படி, கடந்த ஆண்டுமட்டும் ராயல் சொஸைட்டியில் உள்ள 1,177 விஞ்ஞானிகளில் 12.4 சதவீதம் பேர் அமெரிக்காவுக்குச் சென்றுள்ளனர்.
வெளிநாடுகளில் சென்று பணியாற்றும் விஞ்ஞானிகளுக்குக் கிடைக்கும் மதிப்பையும், நல்ல எதிர்காலத்தையும் கேட்டபிறகு ராயல் சொஸைட்டியில் உள்ளபெரிய விஞ்ஞானிகளும் வெளிநாடுகளுக்குச் செல்ல தொடங்கிவிட்டனர் என்றார் சொஸைட்டியின் துணைத் தலைவர் ஜான் என்டர்பை தெரிவித்தார்.
இந் நிலையில், ராயல் சொஸைட்டியின் அறிவியல் துறை வளர்ச்சிக்கு அதன் வேந்தர் ரூ. 6,600 கோடி ஒதுக்கியுள்ளார். இது புதிய விஞ்ஞானிகளை ராயல்சொஸைட்டிக்குக் கொண்டு வரும் என்றும், இருக்கும் விஞ்ஞானிகள் வெளிநாடுகளுக்குச் செல்லாமல் தடுக்கும் என்றும் ராயல் சொஸைட்டியின் தலைவர்ஆரோன் க்ளுக் தெரிவித்தார்.