தமிழகத்தில் இன்று
மகள், மனைவியைச் சுட்டுக் கொன்று கணவரும் தற்கொலை
ஏற்காடு:
மகளைப் படிக்க வைக்க பணம் இல்லாததால், மனைவி, மகளைச் சுட்டுக் கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்டார்.
ஏற்காட்டைச் சேர்ந்தவர் நோயல் தாமஸ் (51). இவர் மைசூர் அரண்மனையில்விளையாட்டு அதிகாரியாக இருந்தவர். இவரது மனைவி ஜெல்டா (40). இவர்களுக்குநதாஷா (16) என்ற மகள் உண்டு.
நதாஷா, ஏற்காட்டில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த ஆண்டுப்ளஸ் ஒன் சேர இருந்தார். அவரை பெங்களூரில் படிக்க வைக்க தாமஸ் திட்டமிட்டார்.இருப்பினும் அதற்குத் தேவையான பணம் அவரிடம் இல்லை. இதனால் கவலையில்இருந்தார்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு ஜெல்டாவும், நதாஷாவும் தூங்கிக்கொண்டிருந்தபோது அவர்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். அதன் பிறகுதன்னையும் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
புதன்கிழமை காலை வெகுநேரம் வரை தாமஸின் வீடு திறக்கப்படாததால் சந்தேகமுற்றபக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர்.
ஆங்கிலோ இந்திய சமூகத்தைச் சேர்ந்த நோயல் தாமஸின் தந்தை, மிகவும் வசதியானகுடும்பத்தைச் சேர்ந்தவர். இருப்பினும் நோயஸ் தாமஸ் அவ்வளவு வசதியானநிலையில் இல்லை. மைசூர் அரண்மனையில் பார்த்த வேலை பிடிக்காததால்,ஏற்காட்டில் வந்து குடியேறினார் என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications