For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யோகம் பயிலுவோம்

By Staff
Google Oneindia Tamil News

காதலித்து ஏமாற்றியதாக ஒளிப்பதிவாளர் மீது வடிவுக்கரசி புகார்

சென்னை:

என்னை ஏமாற்றிய ஒளிப்பதிவாளரிடமிருந்து ஐந்து லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வாங்கித்தர வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் நடிகை வடிவுக்கரசி புகார்கொடுத்துள்ளார்.

தற்போது அம்மா வேடங்களில் தமிழ் சினிமாவில் அசத்திக் கொண்டிருக்கும் நடிகைவடிவுக்கரசி, அந்தக்கால கதாநாயகி. இப்போது அவருக்கும் ஒளிப்பதிவாளர்ஒருவருக்கும் காதல். அந்த காதல் கை கூடவில்லை என்றும், வேறு ஒரு பெண்ணைதிருமணம் செய்து கொள்ள காதலன் முயற்சிப்பதாகவும் வடிவுக்கரசி போலீஸ்கமிஷனரிடம் கொடுத்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

வியாழக் கிழமை சென்னை எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்குவந்தார் வடிவுக்கரசி. கமிஷனர் காளிமுத்துவை சந்தித்து புகார் மனு ஒன்றைக்கொடுத்தார். புகாரை படித்த கமிஷனர், அதை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குஅனுப்பி வைப்பதாகவும், அங்கு செல்லும்படியும் கூறினார்.

அதன்படி ஆயிரம் விளக்கில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குவடிவுக்கரசி சென்றார். அங்கு அவரிடம் போலீஸ் உதவி கமிஷனர் ஜெயகவுகிவிசாரணை நடத்தினார். அப்போது வடிவுக்கரசி கூறுகையில், எனக்கும் அந்தஒளிப்பதிவாளருக்கும் தொடர்பு இருந்தது. என்னை திருமணம் செய்து கொள்வார்என்ற நம்பிக்கையில் நகைகளை எல்லாம் விற்று அவருக்கு 2 லட்ச ரூபாய்கொடுத்தேன்.

இப்போது என்னை ஏமாற்றி விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளஅவர் திட்டமிட்டுள்ளார். எனவே அவரிடம் இருந்து எனக்கு 5 லட்ச ரூபாய் பெற்றுத்தர வேண்டும் என்று கூறினார்.

வடிவுக்கரசியின் புகார் தொடர்பாக ஒளிப்பதிவாளரை அழைத்து விசாரிக்க போலீசார்முடிவு செய்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X