For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

மனித வெடி குண்டுகளுக்கு விடுதலைப் புலிகள் அஞ்சலி

கொழும்பு:

மனித வெடிகுண்டுகளாக மாறி உயிர்த் தியாகம் செய்த புலிகளுக்கு எல்.டி.டி.யினர்அஞ்சலி,

இலங்கையில இது வரை கடந்த 13 ஆண்டுகளில் விடுதலைப் புலிகளின் தற்கொலைப்படையில் மனித வெடிகுண்டுகளாக மாறி தங்கள் கொள்கைக்காக உயிரைகொடுத்தவர்கள் எண்ணிக்கை 188 பேர்.

அவர்களுக்கு விடுதலைப் புலிகள் அஞ்சலி செலுத்தினர்.

தங்களுக்கு எதிராக செயல்படும் அரசியல் எதிரிகளை கொல்லவும், அரசுக்கட்டடங்கள் உட்பட முக்கியமாக கருதப்படும் கட்டடங்களை தகர்ப்பதற்கும்விடுதலைப் புலிகள் மனித வெடிகுண்டுகளை அனுப்புவதை வழக்கமாககொணட்டுள்ளனர்.

தங்கள் உடலில் வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு தாக்க வேண்டியவர்களைநெருங்கி குண்டுகளை இயக்கச் செய்து இலக்கையும் கொன்று தங்களையும்இழப்பவர்கள் மனித வெடிகுண்டுகள்.

1987-ம் ஆண்டு ஜுலை 5-ம் தேதி தான் முதல் மனித வெடிகுண்டாக விடுதலைப்புலிகளின் கேப்டன் மில்லர் என்பவர் வெடிப் பொருள்கள் அடங்கிய லாரியைநெட்டியாடி ராணுவ முகாம் மீது மோதி 39 ராணுவ வீரர்களைக் கொன்று தானும்உடலை சிதறிடித்துக் கொண்டார்.

இதன் 13 வது நினைவு தினத்தை நினைவு கூறும் வகையில் , இதுவரை உயிர்த் தியாகம்செய்த 188 பேரும்கும் அஞசலி செலுத்தி கறுப்பு தினமாக புலிகள் இந்த தினத்தைக்அனுசரித்தனர். இதன் காரணமாக இலங்கை வடக்குப் பகுதியில் கடைகள்அடைக்கப்பட்டிருந்தன. அமைதிப் பேரணிகளும் நடை பெற்றன.

கோயில்களில் பிரார்த்தனைகளும் நடத்தப்பட்டன. சென்ற ஆண்டில் மட்டும்விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 41 பேர் மனித வெடிகுண்டுகளாக மாறிஉயிரிழந்துளனர் என்ப து குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X