தமிழகத்தில் இன்று
மின்சாரம் கேட்டு போராட்டம்: போலீஸ் தாக்கி 7 பொது மக்கள் காயம்
டெல்லி:
டெல்லியின் வட மேற்குப் பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருவதால் ஆத்திரமடைந்தபொதுமக்கள் பெரும் போராட்டத்தில் இறங்கினர். சுமார் ஒரு மணி நேரம நீடித்தஇந்தப்போராட்டம் வன்முறையில் முடிந்தது.
டெல்லியின் புறநகரில் உள்ள சமியாபூர் பாத்லி பகுதியில் அடிக்கடி மின்வெட்டு இருந்து வந்தது.இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அதிருப்தியில் இருந்து வந்தனர். இந்த நிலையில் மின்வெட்டைஎதிர்த்துப் போராட அவர்கள் முடிவு செய்தனர்.
இதையடுத்து புதன்கிழமை இரவு பெரும் திரளான மக்கள் அப்பகுதியில் சாலை மறியலில்இறங்கினர். சாலையில் அமர்ந்து மின்வெட்டை எதிர்த்து அவர்கள் போராடினர். டெல்லி மின்வாரியஅதிகாரிகள் வந்தால்தான் போராட்டத்தைக் கைவிடுவோம் என அவர்கள் தெரிவித்தனர்.இதையடுத்து அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
சுமார் ஒரு மணி நேரம் வரை இந்தப் போராட்டம் நீடித்தது. இதனால் பெரும் போக்குவரத்துநெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் கூட்டத்தினரைக் கலைக்க முயற்சி எடுத்தனர்.இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீஸார் மீது கற்களை வீசியும், தடிகளால்தாக்கியும் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தினர்.அதற்கும் கூட்டம் மசியாததால், கண்ணீர்ப்புகை குண்டுகளைவீசிக் கூட்டத்தைக் கலைத்தனர். இந்த மோதலில் ஏழு போலீஸார் காயமடைந்தனர். நான்குபோலீஸ் வாகனங்களும் எரிக்கப்பட்டன.
டெல்லியில், போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் மோதல் வருவது இது முதல் முறையல்ல.அடிப்படைப் பிரச்சினைக்காக போராடும் பொதுமக்களும், போலீஸாரும் அடிக்கடி மோதிவருகின்றனர். மே 29-ம் தேதி நடந்த இதுபோன்ற ஒரு போராட்டத்தில் 15 பேர்காயமடைந்தனர்.
ஐ.ஏ.என்.எஸ்.