தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
சுற்றுலா மூலம் அன்னியச் செலாவணி வரவு அதிகரிப்பு
டெல்லி:
சுற்றுலா மூலம் இந்தியாவுக்கு அன்னியச் செலாவணி வரவு அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் மட்டும் சுற்றுலா மூலம் இந்தியாவுக்குரூ.819.83 கோடி வருமானம் கிடைத்தது.
இது கடந்த ஆண்டு ஜூன் மாதம் கிடைத்த வருவாயை விட 9.8 சதவீதம் அதிகமாகும் என்று மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
இதுவரை இந்த ஆண்டில் ரூ.6648 கோடி வருமானம் கிடைத்துள்ளது. கடந்த பிப்ரவரியில் மட்டும் அதிகபட்சமாக ரூ. 1417 கோடி கிடைத்தது.
இந்த ஆண்டில் முதல் 6 மாதத்தில் இந்தியாவுக்குச் சுற்றுலா வந்த வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 12,56,133 ஆகும். இது கடந்த ஆண்டில்முதல் ஆறு மாதத்தில் வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை விட 6.3 சதவீதம் அதிகமாகும்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications