விம்பிள்டன் கோப்பையை வெல்ல சாம்ப்ராஸ் - ராப்டர் பலப்பரீட்சை
விம்பிள்டன்:
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் இறுதி ஆட்டத்தில் விளையாட பீட் சாம்ப்ராஸும், பாட்ரிக் ராப்டரும் தகுதி பெற்றுள்ளனர்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டங்களில் வோல்ட்ச்கோவை சாம்ப்ராஸும், அகாஸியை ராப்டரும் எதிர்த்து விளையாடினர்.
இறுதி ஆட்டத்துக்கு சாம்ப்ராஸும், அகாஸியும் தகுதி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதைப் போலலே முதல் அரையிறுதியில் 7-6 (7-4), 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வோல்ட்ச்கோவை எளிதாக வென்று இறுதிஆட்டத்துக்குத் தகுதி பெற்றார் சாம்ப்ராஸ்.
ஆனால், இரண்டாவது அரையிறுதி ஆட்டம் கடுமையாக இருந்தது. ராப்டரும், அகாஸியும் விட்டுக் கொடுக்காமல் ஆடி இருவரும் தலா இருசெட்டுகளைக் கைப்பற்றினர்.
7-5, 4-6, 7-5, 4-6 என்ற செட் கணக்கில் இருவரும் சமநிலையில் இருந்தனர். ஆனால், 5-வது செட்டில் அகாஸியின் இரு சர்வீஸ்களை ராப்டர்முறியடித்தார். இதையடுத்து 6-3 என்ற கணக்கில் 5-வது செட் மட்டுமல்லாமல் ஆட்டத்தையும் வென்றார் ராப்டர்.
தனது 13-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை எதிர்நோக்கி இறுதி ஆட்டத்துக்கு சாம்ப்ராஸ் தகுதி பெற்றுள்ளார். இந்த ஆண்டு விம்பிள்டன் பட்டத்தைசாம்ப்ராஸ் அது சாதனையாகும்.
சனிக்கிழமை நடைபெற உள்ள பெண்களுக்கான இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த வீனஸ் வில்லியம்ஸ் மற்றும் நடப்புச் சாம்பியன்தேவன்போர்டும் மோதுகின்றனர்.