தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
தமிழை ஆட்சிமொழியாக்கக் கோரி ஆக.22-ல் தர்ணா
பாண்டிச்சேரி:
தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக்கக் கோரி ஆகஸ்ட் 22-ம் தேதி நாடாளுமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த தமிழக முற்போக்குஎழுத்தாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
சங்க பொதுச் செயலாளர் இரா.கதிரேசன் பாண்டிச்சேரியில் செய்தியாளர்களிடம் இதுகுறித்துத் தெரிவிக்கையில், கல்வி நிலையங்களில் தமிழ் வழிக் கல்வியில் படிப்பைமுடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கக் கோரி சென்னையில் ஆகஸ்ட் 19-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
ஐந்தாவது வகுப்பு வரை கட்டாயத் தமிழ் வழிக் கல்விக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அப்பீல்செய்ய வேண்டும் என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications