தமிழகத்தில் இன்று
கட்டாய தமிழ்க் கல்வி...உச்சநீதிமன்றம் செல்கிறது தமிழக அரசு
சென்னை:
தமிழகத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் கட்டாய தமிழ் பயிற்று மொழி தொடர்பாக அரசு பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததைஎதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகள் வரை தமிழ் அல்லது தாய்மொழியை கட்டாய பயிற்று மொழியாக கொண்டு கற்பிக்கவேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து ஆங்கிலப் பள்ளிகளின் சங்கங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. வழக்கை விசாரித்த நீதிபதிகள் வெங்கடாசலமூர்த்தி, ஜெகதீசன், தினகர் ஆகியோர் அடங்கிய "முழு பெஞ்ச் கட்டாய தமிழ் பயிற்று மொழி உத்தரவை ரத்து செய்தது.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அப்பீல் செய்வதற்கானஆவணங்கள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கோடை விடுமுறை முடிந்து உச்ச நீதிமன்றத்தில் அன்றாட பணிகள் தொடங்கி விட்டன. இன்னும் ஓரிரு நாட்களில் தமிழக அரசு சார்பில் விசேஷ அனுமதி மனு(எஸ்.எல்.பி) தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
இதற்கிடையில், தங்களிடம் விளக்கம் கோராமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என கோரி சில சங்கங்கள் உச்ச நீதிமன்றத்தில்"கேவியட் மனு தாக்கல் செய்துள்ளன. எனவே அரசு தாக்கல் செய்யும் அப்பீல் மனு மீதான விசாரணையின் போது, ஆங்கிலப் பள்ளிக் சங்கத்தின் சார்பில்விளக்கம் கோரப்படும்.
உச்சநீதிமன்றத்தில் அப்பீல் மனு விசாரணைக்கு வரும்போது மேற்கொள்ள வேண்டிய சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் குறித்து சென்னையை சேர்ந்த பிரபலவக்கீல்களுடன் தமிழ்நாடு நர்சரி மற்றும் தொடக்க, மேல்நிலைப் பள்ளிகள் நிர்வாக சங்கத்தினர் ஆலோசனை நடத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications