தமிழகத்தில் இன்று
ஒரிஸ்ஸாவிலுள்ள புலிகள் வேறு இடத்திற்கு மாற்றப்படும்: அமைச்சர் பாலு
மதுரை:
ஒரிஸ்ஸா மாநிலம் நந்தகனான் விலங்கியல் பூங்காவில் மர்மமான முறையில் 12 புலிகள் இறந்ததையடுத்து அங்கு மீதமுள்ள புலிகளை வேறு விலங்கியல்பூங்காவுக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடப்பதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நந்தகினான் பூங்காவில் மொத்தம் 56 புலிகள் உள்ளன. இவற்றில் 12 புலிகள் இறந்துள்ளன.நோய்த்தடுப்பு குறைவு காரணமாக இவை இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுதொடர்பாக விசாரிக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.அவர்களின் அறிக்கைக்குப் பிறகே என்ன நோய் என்பது தெரிய வரும்.
நந்தகினான் பூங்காவில் உள்ள பிற புலிகளை வேறு இடத்திற்கு மாற்றத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
புலிகள் சாவு குறித்து ஆய்வு நடத்த வெளிநாட்டு நிபுணர்களை அழைத்து வர வேண்டிய அவசியம் இல்லை. நம் நாட்டிலேயே போதுமான விலங்கியல் நிபுணர்கள்இருக்கிறார்கள்.
மத்திய பிரதேச மாநிலத்தில் 50 மயில்கள் இறந்துள்ள. வயல்களில் உள்ள பூச்சி மருந்து கலந்த பயிர்களைச் சாப்பிட்ட காரணத்தால்தான் இவைஇறந்துள்ளன என்றார் அமைச்சர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications