தமிழகத்தில் இன்று
புகழைக் கெடுக்க சதி...நடிகை காவேரி நீதிமன்றத்தில் மனு
சென்னை:
தனது பெயரையும, புகழையும் கெடுக்க சிலர் சதி செய்வதாக டி.வி. தொடர்களில் நடித்து வரும் நடிகை காவேரிநீதிமன்றத்தில் புகார் செய்துள்ளார்.
பல்வேறு டி.வி. தொடர்களில் நடித்து வருபவர் நடிகை காவேரி. வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தில்அறிமுகமானவர். இவர் தற்போது நடித்து வரும் துளசி தொடருக்கான படப்பிடிப்பின்போது,கதாநாயகனுக்கும், காவேரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கதாநாயகனின்கன்னத்தில் காவேரி அறைந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக தொடர் இயக்குநர் தரப்பில்போலீஸில் புகார் செய்யப்பட்டது.
இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் காவேரி தரப்பில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில்கூறப்பட்டிருப்பதாவது:
நான் துளசி என்ற தொடரில் நடித்து வருகிறேன். இதன் கதாநாயகன் வெற்றி. அடிக்கடி இவர் என்னைத்திருமணம் செய்து கொள்ளுமாறு படப்பிடிப்பு நேரங்களில் வற்புறுத்தி வந்தார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். சொந்தக்காரரைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறிவிட்டேன்.
இதனால் ஆத்திரமடைந்த அவரும், இயக்குநரும் சேர்ந்து எனக்கு எதிராக செயல்படத் துவங்கினர்.எனக்கு வேறு தொடர்களின் படப்பிடிப்பு இருக்கும் சமயமாக பார்த்து துளசி படப்பிடிப்பை வைத்தனர். அதுமட்டுமல்லாது, நான் வெற்றியைத் திட்டியதாகவும், கன்னத்தில் அடித்ததாகவும் கூறி போலிஸில்பொய்ப் புகார் பதிவு செய்துள்ளனர்.
நான் டி.வி. தொடர்களில் நடித்து மிகவும் பிரபலமாக இருப்பதால் எனது பெயரைக் கெடுக்கும்நோக்கத்துடன் இந்தப் புகாரை அவர்கள் கொடுத்துள்ளனர். அவர்கள் சம்பவம் நடந்ததாகக்கூறியிருக்கும் நேரத்தில் நான் பிங்கி ஹவுஸ் என்ற தொடரின் படப்பிடிப்பில் இருந்தேன். இதற்கான ஆதாரமும்என்னிடம் உள்ளது.
நான் பல தொடர்களில் நடிப்பதாலும், படப்பிடிப்பிற்காக வெளியூர் செல்ல வேண்டியிருப்பதாலும் வழக்குவிசாரணையில் நேரடியாக ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற காவேரி கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி அக்பர் பாஷா காத்ரி, மனுவுக்குப் பதிலளிக்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்குநோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.