தமிழகத்தில் இன்று
"ஓடிப்போன மனைவிகளும்...கலைந்து போன கனவுகளும்"
சிதம்பரம்:
முதல் மனைவி ஓடிவிட, தாலி கட்டிய மறு நிமிடமே இரண்டாவது மனைவியும் காதலனுடன் தலைமறைவாகி விட இனி யாரு பொண்ணு தருவா என்றுசோகத்தில் புலம்பிக் கொண்டிருக்கிறார் சிதம்பரம் வாலிபர் ஒருவர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள பரத்தூரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். திருமணமான சில மாதங்களில் இவரது முதல் மனைவி இவரைவிட்டுஓடி விட்டார்.
இதனால் கவலையில் ஆழ்ந்திருந்த அவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க இவரது பெற்றோர்கள் முடிவுசெய்தனர். அதன்படி இவருக்கும்,சக்திவிளாகத்தைச் சேர்ந்த சுதா என்ற பெண்ணுக்கும் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்ததும் மணமக்கள் மறுவீட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். புதுமாப்பிள்ளை ராமச்சந்திரன் திருமணக் களைப்பில் சோர்வாக இருந்தார்.உறவினர்கள் அனைவரும் திருமண நிகழ்ச்சிகள் குறித்து பேசிக் கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் புதுப் பெண் சுதாவைக் காணவில்லை என செய்தி பரவியது.வீட்டிலுள்ள அனைவரும் அதிர்ச்சியடைந்து வீடு முழுவதும் சோதனையிட்டனர்.
சுதாவை ஒரு இடத்திலும் காணவில்லை. உடனடியாகப் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் சுதாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்தஆனந்தராஜ் என்ற வாலிபருக்கும் காதல் இருந்ததாகவும், சுதா அவருடன்தான் வீட்டைவிட்டு ஓடியிருக்க வேண்டும் என்றும் தெரிய வந்தது.ஆனந்தராஜையும், சுதாவையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே முதல் மனைவியால் கைவிடப்பட்டு, இரண்டாவது மனைவியும் காதலனுடன் ஓட்டமெடுத்த நிலையில் இனிமேல் எனக்கு யார் பெண்கொடுப்பார்கள் என்ற விடை தெரியாத வினாவுடன், கேள்விக்குரியாகி நிற்கிறார் ாமச்சந்திரன்.












Click it and Unblock the Notifications