தமிழகத்தில் இன்று
அடித்தது பிக்பாக்கெட்.. செய்தது கொலை..கிடைத்தது ஆயுள் தண்டனை
கோவை:
கோவையில் பிக்பாக்கெட் திருடன் கொலையில் 4 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கோவை வி.கே.எல்.நகரைச் சேர்ந்தவர் மோகன் (27). இவரது நண்பர்கள் ரமேஷ் (25), சதீஷ் (24), சவுந்தர் (27),ஷாஜகான் (22). இவர்கள் அனைவரும் பிக்பாக்கெட் திருடர்கள். தங்கள் பிக்பாக்கெட் தொழில் முடிந்ததும்இரவில் சந்தித்துக் கொள்வதுண்டு.
இதில் மோகனுடன் மற்ற 4 பேருக்கும் கொடுக்கல் வாங்கலில் விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில், 1998-ம்ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி இரவு மோகன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது 4 பேரும் சேர்ந்துமோகனைக் கத்தியால் குத்திக் கொன்றனர்.
இந்த வழக்கு விசாரணை கோவை முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்தது. இதில் குற்றவாளிகளான ரமேஷ்,சதீஷ், சவுந்தர், ஷாஜகான் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி வாசுகி தீர்ப்பளித்தார்.