தமிழகத்தில் இன்று
தான் ஓட்டிய பஸ் விபத்தில் சிக்கி குடும்பமே பலியானதால் டிரைவர் தற்கொலை
ரியோடிஜெனிரோ:
தான் ஓட்டிய பஸ் விபத்துக்குள்ளாகி, அதே பஸ்சில் பயணம் செய்த மனைவியும், குழந்தையும் கண் முன் இறந்ததில் மனமுடைந்த பஸ் டிரைவர் துப்பாக்கியால்சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
ரியோடிஜெனிரோவைச் சேர்ந்தவர் பேபரிசியோ டி ஒலிவேரியா (25). இவர் பஸ் டிரைவர். சம்பவத்தன்று இவரது 24 வயது மனைவியும், 2 வயதுகுழந்தையும் இவர் ஓட்டிய பஸ்சில் பயணம் செய்தனர்.
பஸ், ரியோ டி கிரானடே சல் அருகே, ஒசோரியோ என்ற பகுதியில் வந்து கொண்டிருந்த போது பஸ் டிரைவரான பேபரிசியோ தூக்கத்தில் பஸ்சை ஓட்டினார்.இதனால், பஸ் தாறுமாறாக ஓடிக் கவிழ்ந்தது. இதில் பேபரிசியோவின் மனைவியும், குழந்தையும் அவர் கண்முன் பலியானார்கள்.
இதனால் அதிர்ச்சியில் உறைந்த அவர் துப்பாக்கியால் தன்னைச் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். அந்த பஸ்சில் பயணம் செய்த 8 பேர்காயமடைந்தனர். மொத்தம் அந்த பஸ்சில் 17 பேர் பயணம் செய்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications